• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»துப்பாக்கிக் கலாச்சாரம்: “புதிய இந்தியா”வின் யதார்த்தமா?
குறும்பதிவுகள்

துப்பாக்கிக் கலாச்சாரம்: “புதிய இந்தியா”வின் யதார்த்தமா?

முஜாஹித்By முஜாஹித்June 29, 2023Updated:June 29, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

உத்திரப் பிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசின் ஆட்சியில் நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ் என பல செயல்பாட்டாளர்கள் பாசிசத் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளனர். பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள அரசுக்கு உதாரணமாக பாஜகவினரால் உதாரணமாக கூறப்படும் யோகியின் உத்திரப்பிரதேசத்தில் தான் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பெருகி இருக்கிறது.

அம்மாநிலத்தில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.பியும், அவரின் சகோதரரும் நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுபோல் பல்வேறு சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது பாஜகவிற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வந்த சந்திரசேகர் ஆசாத் சுடப்பட்டிருப்பது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தத் தோல்வியையே காட்டுகிறது.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிவரும் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பொதுவெளியில் பலமான கண்டனங்கள் எழ வேண்டியது அவசியம். இந்தத் துப்பாக்கிச் சூடு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தொடர் வன்முறையின் ஒருபகுதியாகவே அமைந்துள்ளது.

இப்படி சமூகத்தில் வன்முறைகள் சர்வ சாதாரணமாவதுதான் இந்துத்துவ சக்திகள் உருவாக்கத் துடிக்கும் “புதிய இந்தியா” போலும்! அவர்கள் வன்முறையை அன்றாட யதார்த்தமாக மாற்ற முனைகிறார்கள். அவர்களின் திட்டம் முறியடிக்கப்படுமா?

இந்தியா பாசிச அரசு
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஜாஹித்

Related Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025

காஷ்மீர்: திரைப்படங்களால் திரிக்கப்படும் இராணுவ தேசம் (3)

December 14, 2024

காஷ்மீர்: திரைப்படங்களால் திரிக்கப்படும் இராணுவ தேசம் (2)

December 13, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.