• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»உரிமை பறிக்கப்படும் உயர்கல்வி நிலையங்கள்
குறும்பதிவுகள்

உரிமை பறிக்கப்படும் உயர்கல்வி நிலையங்கள்

AdminBy AdminJune 2, 2022Updated:May 27, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு மாதம் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரிப் பூங்காவில் உள்ள புல்வெளியில் இவர் தொழுகும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பேராசிரியரின் தொழுகையை வீடியோ வைரலானதை அடுத்து இதை குறிவைத்து இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இப்பேராசிரியர் கல்லூரியின் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரின.

இதுகுறித்து பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா (BJYM) அமைப்பின் மாணவத் தலைவர் தீபக் ஷர்மா ஆசாத் பத்திரிக்கை நிருபர்களிடம் “இப் பேராசிரியர் கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தி கல்லூரியின் அமைதியான சூழலை கெடுக்க முயன்றார்” என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததுள்ளது.
இதையடுத்து பேராசிரியர் ராசிக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து குவாரசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் FIR எதுவும் போடப்படவில்லை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை வந்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா என்பதை விசாரணைக் குழுவின் கூட்டம் முடிவு செய்யும்,” என்று இக்கல்லூரியின் முதல்வர் A.Kகுப்தா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமோஃபோபியா பி ஜே ஒய் எம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

அமரன்: இஸ்லாமிய வெறுப்பின் புதிய அத்தியாயம்

November 6, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.