Author: Admin

ஒருங்கிணைந்த இந்தியாவில் அறிவுச் சமூகம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் ‘இந்தியாவுக்கு என ஒரு தனித்துவமான வரலாறு இல்லாமை’ என்பதாகத்தான் இருந்தது. அதனால் இந்திய விடுதலைக்கு முன்பு தேசிய பிரதேச அரசுகளின் தலைமையில் வரலாற்றை எழுதுவதற்கான முன்னெடுப்புகள் ஏராளமாக நடந்தன. ‘இறந்த காலம் குறித்த எந்தவிதமான விமர்சன உணர்வும் இல்லாத இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற எந்தத் தகுதியும் இல்லை’ என்று இந்தியாவின் நண்பனாகக் கருதப்பட்ட எட்வர்ட் தாம்சன் கூறியுள்ளார். அந்தச் சூழலில் வரலாற்று அறிவியலில் சுயசார்பும் தகுதியும் பெற வேண்டும் என்ற முடிவுக்குத் தேசியவாதிகள் வந்தனர். ‘ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் கற்கும் இந்தியர்கள், தங்களது முன்னோர்களைக் குறித்துக் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டாதது ஏன்?’ என லாலா லஜபதிராய் சுயவிமர்சனம் செய்தார். ‘வங்காளம் தன் வரலாற்றைக் கண்டடைய வேண்டும்’ என பங்கிம் சந்திர சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். இதையடுத்து R.C.தத் (1848-1909), R.Cபண்டார்கர் (1837-1925) ஆகியோர் பண்டைய இந்தியா குறித்து விரிவான…

Read More

NEET-PG 2023 முடிவுகளில் பூஜ்ஜிய சதவீத கட்ஆஃப் என்ற அதிர்ச்சியூட்டும் நிலைப்பாட்டை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. மைனஸ் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள்கூட இதன் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இந்த மூர்க்கத்தனமான முடிவு, இந்தியாவின் மருத்துவக் கல்வியின் தரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விண்ணப்பித்த அனைவரையும் சமரசம் செய்யும் இந்தச் செயல் ஆபத்தானது. முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெறுபவர்களையும், நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தையும்கூட இது கேள்விக்குள்ளாக்குகிறது. மருத்துவக் கல்வியின் மீதான இந்த வெளிப்படையான அவமதிப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதாயத்தை அளித்து, பல கோடி ரூபாய்க்கு மருத்துவ இடங்களை விற்க வழிவகுக்கிறது. கல்வி வணிகமயமாக்கலை இது ஊக்குவிக்கிறது. NeXt போன்ற தெளிவான, நிலையான விதிகள் இல்லாததால் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வதற்கான…

Read More

அரசு ‘மீலாது நபி’ தினத்தன்று விடுமுறை அளிப்பதை நாம் அறிவோம். மீலாது நபி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? மைக்கேல் ஹார்ட் என்ற அறிஞர் உலகின் போக்கையே மாற்றியமைத்த, வரலாற்றில் செல்வாக்கு மிகுந்த நூறு ஆளுமைகளை The Hundred என்ற தனது நூலில் வரிசைப்படுத்தினார். அதில் ஓர் ஆளுமைக்கு அவர் முதலிடத்தைத் தந்தார். உலகில் சுமார் 15 கோடி மக்கள் அந்தப் பேராளுமையின் பெயரைத் தம் பெயராகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்று அந்தத் தலைவர் நம்முடன் இல்லை என்றாலும், அவரின் வழிகாட்டல்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கக்கூடியவையாக உள்ளன. ஆம், அவர்தான் நபிகள் நாயகம் என்று அழைக்கப்படும் முஹம்மது நபிﷺ அவர்கள். அவரின் பிறந்தநாள்தான் மீலாது நபி என்று குறிப்பிடப்படுகிறது. உலகில் வாழக்கூடிய ஏறத்தாழ 790 கோடி மக்களில் சுமார் 180 கோடி முஸ்லிம் மக்கள் இவரைத் தம் தலைவராகவும், வழிகாட்டியாகவும்…

Read More

தேடல்கள், ஆய்வுகள், புது சிந்தனைகளின் ஒற்று மையங்கள் தான் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள். ஒரு நாட்டின் ஜனநாயக சமூக விழுமங்களுக்கு எந்த அளவு இடம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள அங்குள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்தால் போதும் என்பார்கள். இந்தியாவில் இன்று நடைபெற்று வரும் எதேச்சதிகார ஆட்சியின் கோரத் தாண்டவம் பல்கலைக்கழகங்களிலும் அரங்கேறி வருகின்றன. இது மிகவும் ஒரு ஆபத்தான அறிகுறியாகத் தென்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளை எட்டாத ஃபாசிஸ ஆட்சி அனைத்துத் துறைகளிலும்ஆதிக்க குணத்தின் எல்லா அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து வருகிறது. நாட்டின் மதவாத பாஜக அரசு அதன் தொடக்கக் காலம் முதலே மையப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற பல ஆளுமைகளை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வேட்டையாடியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களைத் துன்புறுத்தியது, அதன் விளைவாக ரோகித்…

Read More

சமூகத்தில் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்வது இளைஞர்களால்தான். அவர்கள் வரலாறு நெடுக சிந்தனை ரீதியான, நடைமுறை ரீதியான புரட்சிகளுக்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்துள்ளார்கள். இளைய தலைமுறையின் ஆற்றலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நன்கு உணர்ந்து, சிறந்த சமுதாயத்தை வார்த்தெடுக்கும் பொருட்டு அவர்களின் நல்லொழுக்கத்தையும் அறிவையும் அற உணர்வையும் செப்பனிட உறுதிகொண்டுள்ளது. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்பண்புடையவரே!” – நபிகள் நாயகம் (ஸல்) கல்வி வளாகம் என்பது எதிர்மறையான சூழலைக் கொண்டிருக்காமல், கல்வியையும் ஒழுக்கத்தையும் செழித்தோங்கச் செய்யும் தளமாக இருக்க வேண்டும் என்று SIO கருதுகிறது. கல்வியை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதுடன், மாணவர்களை ஒழுக்கநெறிமுறைகளுக்கும், அறத்துக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழச் செய்து, எல்லா விதமான சமூகத் தீமைகளுக்கும் எதிரான போராட்டத்தை வழிநடத்துவோராக அவர்களைத் தயார்ப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். SIOவின் இலக்குகள் அறிவும் விழிப்புணர்வும்: உண்மையான அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்துவது SIOவின் முதன்மைப் பணியாகும். சமூக விவகாரங்களை விமர்சனபூர்வமாக அணுகுவதற்கும், அறிவார்ந்த…

Read More

கடந்த மே 3ம் தேதியிலிருந்து பாஜக ஆட்சிபுரியும் மணிப்பூரில் வன்முறை நெருப்பு பற்றியெரிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இப்போது ஹரியானா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களின் உயிர், உடமைகள், வியாபாரம், வழிபாட்டுத் தலங்கள் முதலானவை அழிக்கப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மீதான வன்செயல்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளில் சில: ஜூலை 22 – குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவிலுள்ள ஒரு கிராமத்தில் பசு விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரு முஸ்லிம் நபரை இந்துத்துவ கும்பல் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. ஜூலை 25 – மத்திய அசாமில் 6 இளைஞர்கள் மீது பசுக்களைத் திருடியதாக பொய்க் குற்றம் சாட்டி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் சதாம் உசேன் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்; ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களைக் காப்பாற்றச் சென்ற…

Read More

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடியிடம் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 5225 மாணவர்கள் கற்பதற்கான இடங்கள் இருக்கின்றன. பொதுவாகவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் கற்கச் செல்லும் தமிழக மாணவர்களில் அநேகமானோர் 15% உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் (AIQ) தங்களுக்கான இடங்களை எடுப்பதில்லை. மாறாக, 85% உள்ள மாநில ஒதுக்கீட்டிலேயே தங்களின் இடங்களைப் பெறுகின்றனர். இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிக இடங்களைப் பெறும் சூழல் உள்ளது. மட்டுமின்றி, கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைவாக எடுத்த…

Read More

மு.சிவகுருநாதன் குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச்சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு தொகுத்தளிக்கிறேன். (1) 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், ‘அண்டை நாட்டுறவைப் பொறுத்த வரையில் இந்தியா ஓர் உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒருபகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன.’ (பக்கம் 295). இந்தியாவையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் எனக்…

Read More

மக்களுக்கான சித்தாந்தங்கள் என கூறிக்கொண்டு இந்த உலகில் தோன்றியவை எல்லாம் மக்களை வஞ்சிக்கின்றன. அந்த சித்தாந்தங்களால் குறிப்பிட்ட சில வர்க்கங்களே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்களுக்கான விடுதலையை, விடியலைத்தான் என்பதை இன்று நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மக்களுக்கான விடியலைத் தருகிற ஒரே சிந்தனையாக இறைவன் வழங்கிய இஸ்லாமால் இருக்க முடியும். இன்று மக்களிடம் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியாக வழங்கிட முடியுமானால் அது இஸ்லாமால்தான் முடியும் என்பதை புரிந்துகொண்ட ஆதிக்கவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். அதனைத் தான் இஸ்லாமோஃபோபியா என்கிறோம். இந்த இஸ்லாமோஃபோபியா எவ்வளவு ஆபத்தானது, அதனை எதிர்த்து வலுவானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏன் அவசியமாகிறது. அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்த வேண்டிய அவசியம் என்ன? போன்றவற்றைக்…

Read More

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். மாஹி-மாண்டாவி என்ற விடுதியில் இரவு உணவு அருந்தியதற்குப் பின்பு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ABVP) சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது ஒரு அறையில் நஜீப் அகமது இருந்தார். முதுகலை உயிரித் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நஜீபுக்கு விடுதி கிடைத்து இரண்டு வாரங்களே ஆகின. ஜாமியா மில்லையா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் ஜே.என்.யு.வில் தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், இந்த வளாகத்திற்கு வந்தவர் நஜீப். இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவினரும் அவர்களது மாணவ அமைப்பும் இயல்பாகவே முஸ்லிம்களைப் பார்க்கும்போது, வெறுப்பும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருக்கின்றனர். ஓட்டுக் கேட்பதாக நஜீப் அறைக்குள் சென்றவர்கள், அங்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.…

Read More