Author: முஹம்மது யஹியா பாஷா

தென் தமிழகத்தின் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியமிக்க சகோதர சமயத்தவர்களினுடையே இருக்கும் பேரன்பின் பிணைப்பையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். வளர்ந்து வரும் டெக்னாலஜி & மெஷின்களுக்கு இணையாக மக்கள் கையால் தறிகளை நெய்து பிழைப்பை நடத்த முடியாமல் வேலைக்காக அயல்நாட்டு வாழ்க்கையைத் தேர்வு செய்வதால் ஏற்படும் சிரமங்களையும், நேசத்திற்குரியவர்களின் பிரிவு ஏற்படுத்தும் வலிகளையும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது. இஸ்லாமிய கலாச்சாரம் என்ற ஒற்றை சாராம்சத்தை மட்டும் சொல்லாமல் இஸ்லாமியர்களின் வாழ்வியல், அவர்களின் பண்பாடு, இன்று கொஞ்சம் கொஞ்சமாக அல்ல வேகமாக மறைந்து வரும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை, மாற்று மதத்தவரோடு இஸ்லாமிய மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு என அத்தனையும் நம் கண் முன்னே பயணிக்கிறது. இன்றைய நடைமுறை வாழ்வில் அங்கும் இங்குமாக முஸ்லிம் சமூகத்திற்கும், சகோதர சமயத்தவர்க்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கலவரங்கள், பொய், அவதூறுகளை, சாதாரணமாக போட்டோ எடுக்க வரும் நபர்களோடு மாமா மருமகனாக உறவாடுவதில்…

Read More