தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள் 50% க்கும் மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பழமையான சென்னைப் பல்கலைகழகத்தில் 67% காலிப்பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 59%, பாரதிதாசன் பல்கலைகழகத்தில் 54% மும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்தச் செய்தி அதிர்ச்சியும் கவலையுமளிக்கிறது.
இந்தியாவில் உயர்கல்வி முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் பேராசிரியர் பற்றாக்குறையினால் பெரும்பாலான பல்கலைக்கழக துறைகள் ஒரே ஒரு பேராசிரியரைக் கொண்டும் தற்காலிக பொறுப்பு துறை தலைவர்களைக் கொண்டும் நடத்தப்படுகிறது. பல இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டும் போக்கை SIO வன்மையாக கண்டிக்கிறது.
தற்போதைய தமிழக உயர்கல்வித் துறை உடனடியாக தலையிட்டு மாநிலப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும் 16 பல்கலைக்கழங்கள் துணை வேந்தர் இல்லாமல் பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது. மாநிலப் பல்கலைக்கழங்களில் ஒன்றிய அரசின் பங்கீட்டினால் மட்டுமே இத்துனை பாதிப்புகளும் அரங்கேருகிறது. எனவே தற்போதுள்ள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்த ஒன்றிய அரசுக்கு முழு அழுத்தம் கொடுத்து மாநில பல்கலைகழகங்களில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என SIO கோரிக்கை வைக்கின்றது.

