Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»நீதிக்கான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..!
கட்டுரைகள்

நீதிக்கான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..!

முஹம்மது பஷீர்By முஹம்மது பஷீர்August 16, 2022Updated:May 11, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

மீண்டும் ஃபலஸ்தீன் மீது யூத இஸ்ரேலிய அரசு குண்டு மலை பொழிவித்து ஃபலஸ்தீன சகோதர, சகோதரிகளை வஞ்சித்துள்ளது. தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளான ஐநா சபை, சமூக ஆர்வலர்கள், சமூக நீதிக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் எல்லாம் எங்கே என்ற கேள்வி இப்போதும் மறவாமல் எழுகிறது. திட்டமிட்டே ஒரு சமூகத்தின் மீது அரங்கேற்றப்படும் வன்முறைகள், அடக்குமுறைகள் எல்லாவற்றையும்
வேடிக்கைப் பார்த்து கடக்கும் இந்த மனோபாவத்தைப் பார்க்கின்ற வேளையில் நீதிக்கானப் போராட்டத்தில் பாராபட்சம் காட்டுபவர்கள்தான் அடிப்படைவாதிகள், வர்க்கவாதிகள், சாதியவாதிகள் என்ற முடிவிற்கே வர மனம் எத்தனிக்கிறது.

நீங்கள் பேசும் மனித ஜீவ அபிமானங்கள் யாருக்கானது? நீங்கள் பேசும் சமூகநீதி யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரமும், உரிமைகளும் யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரம், உரிமை இவையெல்லாம் நீங்கள் சார்ந்த சமூகத்துக்கானதுதான் என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், நீங்களும் ‘அநீதியாளர்களின் பங்காளிகள்’ என்பதுதான் திட்டவட்டமான உண்மை.

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் குற்றவாளிகள் நிரூபணம் ஆவதற்கு முன்னரே ‘இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இது’ என கண்டனங்களையும், எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்யும் செக்யூலர்களையும் ஃபலஸ்தீன் மக்களின் மீதான தாக்குதலுக்கு எவ்வித கண்டனத்தையும் சிறு பதிவாகக்கூட வெளிப்படுத்தாமல் உறங்கிக் கிடக்கும் பொதுமனமும்தான் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறது. உங்களின் நீதி குறித்த கண்ணோட்டத்தை மீள் பரிசீலனை செய்து தீவிரவாத இஸ்ரேலிய அரசுக்கு எதிராகவும் கண்டனக் குரல்களையும் எழுப்புங்கள்!

இந்தியா சமூகம் சல்மான் ருஷ்டி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது பஷீர்

Related Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.