Author: Admin

ஒரு இந்திய மாணவன் உக்ரைனில் ரஷ்சியாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அப்பட்டமான இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. போர் பதட்டம் அதிகரித்த பொழுதே மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் எச்சரித்து, அவர்களுடைய பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்து தன்னுடைய நாட்டிற்கு அழைத்தபொழுது இந்தியா மட்டும் அமைதி காத்ததை அங்குள்ள மாணவர்கள் பலர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்ததை இந்த நாட்டு மக்கள் அனைவரும் கேட்டோம். மேலும் இந்திய தூதரகத்துக்கு பலமுறை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததையும் மாணவர்கள் கண்ணீரோடு பதிவு செய்தனர். ஆனால் முட்டாள் சங்கிகளோ நவீன் பிரைவேட் ஜெட்டிற்க்காக காத்துக்கொண்டிருந்தாரா? இல்லை பிரதமர் வந்து தனியே அவரை அழைக்க வேண்டுமா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வழக்கம்போல உளறிக்கொண்டு இருக்கின்றனர். உணவிற்காக வரிசையில் நின்ற ஒரு இந்திய மாணவனின் மரணத்தால் இந்தியாவே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது இவர்கள் அதற்கு காரணம் மோடி கிடையாது என்று முட்டு கொடுக்கும் பதிவுகளை எழுதி…

Read More

கர்நாடக கல்வி வளாகங்களில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுக்க சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்துத்துவ பாஜக அரசால் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் இக்கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதிமனத்தில் நாள்தோறும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் முன்னெடுப்பை பாஜக ஆளும் பிற மாநிலங்களும் பின்பற்ற விரும்புகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது மதுரை மேலூரில் உள்ள பாஜக தேர்தல் முகவர் ஒருவர் முஸ்லிம் பெண்களை ஹிஜாபை நீக்கிவிட்டு வாக்களிக்குமாறு கலகம் செய்திருப்பது தமிழகத்திலும் சங்பரிவாரங்கள் கர்நாடக முன்மாதிரியை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்க முயலுவதாக புரிந்துக் கொள்ளலாம். இவ்விவகாரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அதிகார தரப்புகள் அனைத்து. பாஜகவை விட்டு விலகி நின்றிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். இப்பின்னணியில், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் அறிவித்துள்ள…

Read More

கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள தலைமுக்காடுப் பிரச்சினை வேறு வேறு விவாதங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரச்சனை திசை விரும்புவதை உணர்ந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைமை அதிலிருந்து பின்வாங்கும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் சமூகமும் போராடுவதற்கு தங்களுக்குக் கிடைத்து இருக்கக்கூடிய புதிய ஒரு வாய்ப்பை பயன்படுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இயக்கங்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான். இதன் மறுபக்கம் முற்போக்கு கருத்தாளர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள், தாராளவாத சிந்தனையாளர்கள் என்று தங்களை முன்னிலைப்படுத்த கூடிய நபர்கள் முக்காடு என்பது முஸ்லிம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் அடையாளம். தனது ஆடை எது என்பதை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதை ஆண்கள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனத்தை போதிக்கக்கூடிய ஒரு ஆடை அடையாளம். ஆகவே, அதை முஸ்லிம் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் தங்களின் பெயர்களில்…

Read More

இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என SIO தமிழ்நாடு கோரிக்கை. புல்லி பாய் செயலியில் இஸ்லாமிய பெண் பத்திரிக்கையாளர்கள், பெண் போராளிகளின் புகைப்படங்களை பதிவேற்றி போலியாக ஏலம் விடப்பட்டது அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்புணர்வையும், பெண் வெறுப்பையும் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோல ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியின் மூலம் 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் சுயவிவரங்கள், புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு ஏலத்தில் விடப்பட்டபோதே அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை, காரணமானவர்கள் கைதும் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இப்போது புல்லி பாய் செயலியின் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதும், அதனை அரசு கண்டும் காணாமல் இருப்பதும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை இந்துத்துவா வாதிகள் கட்டமைப்பது தெளிவாகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் முற்போக்குவாதிகள், பெண்ணியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் இதுகுறித்து வாய்திறக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும்…

Read More

உலகமறிந்த ஆன்மீகம் என்பது பொது வாழ்வை முற்றாகத் துறந்து; சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவதை விட்டு முழுமையாக விலகி; இறையோறுமை, தியானம், அமைதி, அன்பு போன்ற கருத்துகளை பரவச் செய்வது தான். ஆனால் கடந்த டிசம்பரில் டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஹிந்து சாமியார்களின் மாநாட்டில் சாமியார்களின் பேச்சு இதற்கு நேர் எதிராக இருந்தது. உத்தரகாண்டில் நடைபெற்ற இந்து சாமியார்களின் மாநாட்டின் மையக்கருத்து, “இஸ்லாமிய இந்தியாவில் தர்மத்தின் எதிர்காலம்: சவால்களும்- தீர்வுகளும்” என்பதுதான். மையக்கருத்தே தேச ஒற்றுமையையும் அமைதியையும் துண்டாடும் வகையில் இருக்கிறது. இதை தொடர்ந்து அங்கு பேசிய ஒவ்வொரு சாமியார்களும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்- கிறிஸ்தவர்களின் வாழ்வையும் உயிரையும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது. அந்த மாநாட்டில் பேசிய ஒரு சாமியார் இப்படி கூறுகிறார், “நூறு பேர் இருந்தால் போதும் அவர்களில் 20 லட்சம் பேரை கொன்று விடலாம்” மற்றொரு சாமியார் இவ்வாறு கூறுகிறார், “அவர்களை கொலை செய்ய நமது…

Read More

அந்த மலைகளில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆட்டு குட்டிக்கு ஏதாவது நேர்ந்தால் கூட என் இறைவனிடம் நான் பதில் கூற வேண்டும் என்று அரேபியவை ஆட்சி செய்த கலிபா உமர் ரலி அவர்கள் கூறினார்கள், அதுபோல இன்று பொறுப்பாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கு உள்ள காடுகள், நீர்நிலைகள்,காற்று,மண்வளங்கள்,வனவிலங்குகள் என எல்லாவற்றுக்குமான பொறுப்பாளியாக தான் ஒரு தலைவன் தேர்தெடுக்கப்படுகிறார் ஆனால் தற்போது இருக்க கூடிய தலைமை என்பது வெறும் மனிதன் மனிதன் மனிதன் என்று சுழல கூடிய ஒன்றாக மாறிவிட்டது.dha இந்த பூமி பந்தானது வெறும் மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாட கூடிய ஒன்று இல்லை இங்கே இருக்கும் சிறு அனில் முதல் பெரிய யானை வரை இங்கு வசிக்கும் உரிமை உடையது தான், மனிதனுக்கு பெரிய அளவு உரிமையும் அனில் போன்ற ஜீவராசிகளுக்கு சிறிய அளவு உரிமையும் என்ற பாகுபாடு கிடையாது இயற்கை தராசில் அனைத்தும் உயிரினங்களே, இந்த பூமியில் வசிக்கும் உயிரினங்கள்…

Read More

2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, ​​மக்கள் தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாடு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டை அச்சறுத்தும் வகையில் அதிகரித்து வரும் மக்கள்தொகை ‘பெருவெடிப்பை’ குறித்து சில கருத்துக்களைச் சொன்னப் பிறகுதான் இந்த அறிவிப்பு வந்தது. உண்மையில் அப்படியொரு ‘பெருவெடிப்பு’ இந்தியாவில் இல்லை; எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நமது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (மொத்த கருவுறுதல் விகிதம்) குறைந்து வருவதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகை ஒருநிலைப்பட்டு கட்டுப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புள்ளி விவரக் கணக்குகளும் ஆவணங்களும் அல்ல, பெரும்பாலும் இன பேதங்கள்தான் சங்பரிவார்களின் இன வெறி அரசியலின் முதுகெலும்புகள் . இயல்பாகவே, இந்துத்துவா வாதிகள் இந்தச் சொற்பொழிவுக்கு பெரும் விளம்பரம் கொடுத்தனர். சங்பரிவார தலைவர்கள் பலர் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை உயர்த்தவும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பகிரங்கமாக…

Read More

. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர் தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார். அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகம் படித்தவர்கள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும்…

Read More

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து 38 இஸ்லாமியர்கள், இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் மற்றும் வீரப்பன் வழக்கில் உள்ள மாதையன் ஆகியோர் தமிழ்நாட்டுச் சிறையில் வாடுகின்றனர். எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களை விடுவிப்பதாக கொள்கை முடிவெடுத்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைப் போட்டுவருகிறது. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் குறுக்கே நின்று கொண்டிருந்தன. இது தொடர்பான அரசாணை ஒன்றை நவம்பர் 15 அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அது 2018 ஆம் ஆண்டு அரசாணையைவிடவும் மோசமான ஒன்று என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு அரசு 700 பேரை முன் விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதில் நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஒருவர்கூட வெளிவர முடியாதபடியான அரசாணை இது.…

Read More

மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் பிரதமர். விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திரச் சந்தை ஆதரவு பொருளாதார அறிஞர்கள் இச்சட்டங்களை ஆதரித்தனர். மாறாக, இவை விவசாயிகளைப் பெருந்தொழில் நிறுவனங்களின் லாப நோக்குக்கு ஏற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளிவிடும் என்று இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் எதிர்த்தனர். என்னைப் பொருத்தவரை, சட்டங்களின் உள்ளடக்கத்தைவிட, அவை உருவாக்கப்பட்டதிலும், அவசர கதியில் எப்படி அணுகப்பட்டன என்பதிலும்தான் பிரச்சினை அதிகம் என்பேன். அவற்றை சட்டமாக்கிய விதமும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க இந்த அரசு கையாண்ட கொடூரமான அடக்குமுறைகளும், ஜனநாயக வழிமுறைகளையும் நடைமுறைகளையும் அப்பட்டமாக மீறிய செயல் என்பேன். முட்டாள்தனம் இந்திய அரசமைப்புச் சட்டப்படி, வேளாண்மை என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்குள் வருவது ஆகும். ஆனால், மூன்று வேளாண் சட்டங்களும் எந்தவொரு மாநில அரசையும் – பாஜக ஆளும் மாநிலங்களைக்கூட – ஆலோசனை கலக்காமலேயே இயற்றப்பட்டன. இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது…

Read More