Author: Admin

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் யூதர்கள். அவர்களைப் பொருத்தவரையில் ஹிட்லருக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள் என்றாலும் பிரிட்டன் அவர்களுக்கு சற்று விஷேசமான நாடு. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில்தான் படித்த வசதியான யூதர்கள் அதிகமானோர் அடைக்கலமாகி இருந்தனர். ஆயிரமாயிரம் யூதர்கள் எங்களையும் பிரிட்டன் படையில் வீரர்களாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் நாங்களும் பிரிட்டன் சார்பில் போரில் கலந்து கொள்கிறோம் என பிரிட்டன் அரசைச் சுயமாகவே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரிட்டன் ஆதரவு நிலை அவர்களிடையே வெறித்தனமாக நிலவியது. ரஷ்யாவும் ஜெர்மனியை எதிர்த்த நாடுதான். ஆனால் அங்கு நடந்த கிறித்தவ யூத மோதல்கள் ரஷ்யாவுடன் இணக்கமான சூழ்நிலையைக் கொடுக்கவில்லை. அங்கிருந்து சுமார் பத்து இலட்சம் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் வடு இன்று வரையில் யூதர்களிடம் இருக்கிறது. டேவிட் பென்குரியன் இஸ்ரேல் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர். யூதர்களுக்காக ஹிட்லர் போலந்து நாட்டில் ஆஸ்விட்ச் நகரில்தான் மிகப் பெரும்…

Read More

1876 -1909 காலகட்டம். இரண்டாம் அப்துல் ஹமீது, உதுமானியப் பேரரசின் அன்றைய ஆட்சியாளர். பிஸ்மார்க் தலைமையிலான ஆறு நாடு- களைச் சார்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு தங்களின் பெர்லின் தீர்மானத்தை இவருக்குத்தான் அனுப்பி வைத்தது. கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது ஒரு ரெண்டுங்கெட்டான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டமும், மேற்கத்தியப் பண்பாடும் கலந்து கட்டிய ஆட்சி முறையில் ராஜாங்கம் இருந்தது. கலீபாவின் அரண்மனையில் மேற்கத்தியப் பண்பாடு கொடிகட்டிப் பறந்தது. ஆனால் துருக்கியப் படையில் மிகச்சிறந்த போர் வீரர்கள் தளபதி உஸ்மான் பாஷா தலைமையில் ஆட்சி மாண்பைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்தனர். ஆட்சி மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். போர்களுக்கான செலவும், கப்பல் படையை நவீனப்படுத்துவதில் கொட்டிய பணமும், ஆட்சிக் கஜானாவைக் கடனாளியாக்கி இருந்தது. இதே கால கட்டத்தில்தான் ஜெர்மனியில் நவீன சிந்தனையுடன் கூடிய ஒரு யூதர், மேற்கத்தியப் பண்பாட்டுக்கு ஏற்ப யூத மதத்தை நவீனப்படுத்த வேண்டுமென பரப்புரை செய்து கொண்டிருந்தார்.…

Read More

உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்: கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர்.ஒரு அமைதியான நிம்மதியான நிலைக்கு மீண்டும் திரும்பியது. சியோனிசதிற்கு முன்பு1887-88ம் ஆண்டில் பாலஸ்தீனம் ஒரு அமைதியான நிலையில் இருந்தது அப்போது அந்நாட்டில் 6,00,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தன அதில் 10சதவீதம் கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் முஸ்லிகளும் 25,000 யூதர்களும் இருந்தார்கள்.அவர்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டலும்,இனக்கமும்,அமைதியும் காணப்பட்டது.சியோனிஸத்தின் வருகைவரை பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான உறவுகள் நிலையான மற்றும் அமைதியானவையாக இருந்தன. சியோனிஸம்1880-ல் ஜெர்மனி…

Read More

1878ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 28 நாடுகளும் கலந்து கொண்டனவா என்றால் இல்லை. பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். அப்போது ஐரோப்பிய யூனியன் என்று எதுவும் இல்லை. ஐரோப்பிய யூனியனை ஏற்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கம் என்றாலும் இந்த ஆறு நாடுகள் மட்டுமே ஒரு யூனியன் போன்று செயல்பட்டன. அந்த மாநாட்டில் வேறொரு நோக்கமும் பேசப்பட்டது. அது உதுமானியப் பேரரசின் செல்வாக்கை ஐரோப்பாவில் குறைப்பது என்பதுதான். அன்றைய காலகட்டத்தில் ஒட்டமன் என்கிற உதுமானியப் பேரரசின் செல்வாக்கு தென் கிழக்கு ஐரோப்பா எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. கிரீஸ், செர்பியா, ரோமானியா, பல்கேரியா என உதுமானிய ஆட்சி தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் தன் ஆக்டோபஸ் பிடிக்குள் வைத்திருந்தது. ஐரோப்பிய நாடுகளின் விடுதலை முழுதாக இல்லாமல், ஐரோப்பிய யூனியன் சாத்தியமில்லை. உதுமானியப் பேரரசு பீனல் கோட் முறையிலான…

Read More

1968ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேலைச் சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளுடன் ஆறு நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் யுத்தம் முடிவடைந்திருந்தது. நடந்து முடிந்த போரில் இஸ்ரேலிய அரசு பெண்களையும், குழந்தைகளையும் அரக்ககத்தனமாகக் குண்டுவீசிக் கொன்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகள் தனித் தனியாக புகார் கொடுத்திருந்தன. இத்தனை நாடுகள் சேர்ந்தும் இஸ்ரேலை துவம்சம் செய்ய முடிய- வில்லையே என்ற வருத்தம் அரபு நாடுகளுக்கு முதன்முறையாக ஏற்பட்டிருந்தது. உதுமானிய கிலாஃபத்தை விட்டு வெளியேறிய பின்பு சுமார் 43 ஆண்டுகள் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கிடையே பெரிதாக எந்தவித ஒற்றுமையும் புரிதலும் இல்லை. அரபு நாடுகள் எதிர்பார்க்காத சட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் தங்களின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மூன்று மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் அந்தப் புண்ணிய மலைத் தோட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் எக்காலத்திலும் இடிக்க முயற்சி செய்யாது. இஸ்ரேல்…

Read More

ஈஸா நபியை ‘ஈஸப்னு மர்யம்’ என அழைக்கிறது குர்ஆன். ‘மர்யமுடைய மகன் ஈசாவே’ என்பதுதான் அதன் பொருள். வானவர்கள் கூறினார்கள். ‘மர்யமே..! நிச்சயமாக அல்லாஹ் தன்னிலிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு மகன் வரவிருப்பதைப் பற்றி நற்செய்தி கூறுகிறான். அவருடைய பெயர் அல் மஸீஹ்’. ‘எங்கு அவர் உயர்த்தப்பட்டாரோ அங்கிருந்து இறங்கி வருவார், அவர் இறைவனிடம் மிக கண்ணியமிக்கவர். அவர் இறங்கி வராமல் இந்த உலகம் தன் இறுதி மூச்சை விடாது’ என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை. யூதர்களின் நம்பிக்கை வேறு விதமாக இருக்கிறது. கிருஸ்து வருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆண்டி க்ரைஸ்ட் வருவார். அதுவும் தங்களின் யூத இனத்தில் வருவார், ஆண்டி க்ரைஸ்ட் என்றால் கிருஸ்துவுக்கு எதிரானவர் என்று பொருள். ஆண்டி க்ரைஸ்டை முஸ்லிம்கள் ‘தஜ்ஜால்’என்கிறார்கள். கிறித்தவர்களுமே ஆண்டி க்ரைஸ்ட் ‘இறைவனின் விரோதி’ எனச் சொல்கின்றனர். ஆண்டி க்ரைஸ்டைப் பற்றி ஏகப்பட்ட ஹாலிவுட் படங்கள் வந்துவிட்டன.…

Read More

கி.பி.70. ரோமர்களின் படை ஜெருசலத்தைச் சுற்றி வளைத்தது. ரோமப் படைகளை நோக்கி படைத்தளபதி தித்தூஸ் மிக ஆக்ரோஷமான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான். ‘500 ஆண்டுகள் பழமையான கோயிலைத் தவிர்த்து ஏனைய இடங்களைத் தாக்குங்கள்’என்பதுதான் அவனிட்ட உத்தரவு. யூதர்களுடன் ஜொசிஃபெஸ்ஸை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி போர் இல்லாமல் ஒரு பொதுப்படையான முடிவுக்கு வரலாம் என்று தித்தூஸ் நினைத்தான். ஆனால் யூதர்களின் தந்திரமும், சூழ்ச்சியும் தித்தூஸுக்குக் கடும் கோபத்தையே வரவழைத்தது. இச்சூழ்ச்சியை அறிந்த தித்தூஸ் ‘ஒரு யூதனும் உயிரோடு இருக்கக் கூடாது’என்ற கடுமையான உத்தரவைப் பிறப்பித்தான். ரோமப் படைவீரர்களும் கடும் கோபத்தில் இருந்தனர். யூதர்களின் தாக்குதல்களாலும், தந்திரங்களாலும் சீற்றமடைந்திருந்த ரோமானிய வீரர்கள், ‘அவர்களின் கோவிலை மட்டும் விட்டு விடுங்கள்’ என்ற தித்தூஸின் உத்தரவை ஏற்காமல் கோயிலுடன் இணைந்திருந்த பகுதியில் தீ வைத்தனர். வரலாற்றில் இரண்டாம் முறையாக யூதர்களின் கோவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஜொசி ஃபெஸ் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ரோமர்கள் பேச்சுவார்த்தை…

Read More

ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் 1987 ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.வெடிமருந்துச்…

Read More

கிமு 300 முதல் கிபி 200 வரையிலான கால-கட்டத்தில் நெகவ் பாலைவனத்தில் நான்கு நகரங்கள் வர்த்தகத்தில் செழித்திருந்தன. அவ்தக், ஹலுசா, மம்ஷிக், ஷவ்தா ஆகிய நான்கு பாலைவன நகரங்கள் தென் அரேபியாவின் மேமனிலிருந்து மத்திய தரைக்கடல் துறைமுகமான காசா வரையில் இலாபகரமான வர்த்தகப் பாதையாக இருந்து வந்தது. இந்தப் பாலைவன வர்த்தகப் பாதையில் பெட்ரா, காசா முதலான நகரங்களும் இணைக்கப்பட்டு மிகப்பெரும் பாலைவன வணிகம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது. பாலஸ்தீனம் இதன் முக்கிய வணிகம் கேந்திரம். ஜெருசலம் பெருவாரியான மத்திய கிழக்கு அரபு மக்களின் வியாபாரத் தொடர்பு மிக்க நகராகவும் அறியப்பட்டிருந்தது. புனித யாத்திரை செய்பவர்களின் கூட்டமும், கிஸ்ரா, பாரசீகம், யமன் வியாபாரிகளின் சந்தைகளும், பதூயீன்கள், கானான்கள், சமாரியன்களின் ஒட்டகம், ஆடுகளின் விற்பனைச் சந்தைகளும், பாலஸ்தீனத்தின் நெகவ் பாலைவனத்தை ஓர் வணிகக் கேந்திரமாக மாற்றியது. 1920ஆம் ஆண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆர்மி ராங்குலர் ஜீப்பில் புழுதி பறக்க அந்த…

Read More

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி படிப்பிற்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் மட்டும் இரத்து செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. பள்ளி இறுதியாண்டு தேர்வுகளை நடத்தினால் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், நீட் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? ஏனெனில், +2 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி இடங்களை நிரப்ப வேண்டும் என்பதே இந்திய ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, ஏராளமான மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. 2020-21 கல்வியாண்டு முதலே பள்ளிகள் செயல்படாத நிலையில் சனவரி 2021 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரவல் தடுப்பு (SOP – Standard Operating Procedures)…

Read More