Author: Admin

ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனை கட்டணம், மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இறந்தவர்களுக்கான சுடுகாட்டிற்குப் போராடி வரும் வேளையில், உலகப் புகழ்பெற்ற இந்நாட்டின் பணக்காரர்கள் எங்குச் சென்றார்கள்? என்று தேடிப்பாருங்கள். அவர்கள் மொத்தமாக மாயமாகிவிட்டார்கள் அல்லது பெயரளவிற்கு உதவி செய்து கொண்டு ஒதுங்கிக்கொண்டார்கள். சாமானியர்களின் சுரண்டலினால் மட்டுமே இயங்கும் அவர்களிடம் இரக்கம், உதவிப் போன்றவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவர்களின் நிலையை வெளிப்படுத்தவே இப்பதிவு. ஒரு நாளைக்கு தற்போது 4 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000. இந்நிலையில், இந்நாட்டையே உரிமை கொண்டாடத் துடிக்கும் பெரும் பணக்காரர்கள் எவ்வித உதவும் நடவடிக்கைக்கும் முன்வரவில்லை. ஒரு சிலர் உதவி செய்திருந்தாலும் அது அவர்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்விற்கான பங்கை வழங்கினார்களே ஒழியச் சொந்த நிதியைத் தரவில்லை. சராசரி வருவாயிலிருந்து 2% சதவீத சமூக பொறுப்புணர்வு உதவியை (Corporate social responsibility) இந்திய அரசியலமைப்பு சட்டம்…

Read More

தமிழக தேர்தலில் இறுதியாக திமுக வென்றுள்ளது. ஒருவழியாக நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக முதல்வராகிவிட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறாதது பொதுவாகவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மிகவும் மோசமான ஆட்சியாக வெளிப்பட்ட எடப்பாடி தலைமையிலான அதிமுகவினாலேயே கணிசமான அளவு வாக்கைப் பெற முடிந்துள்ளது. குறிப்பாக, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடைப்பட்ட வாக்கு சதவீதம் என்பது சொற்பம்தான். அப்படியிருக்கையில், இந்த தேர்தல் இன்றைய தமிழக நிலை குறித்த பல பாடங்களைக் கற்பித்துள்ளது. இத்தேர்தலில் திமுக வெல்வது ஏற்கனவே தீர்க்கமானதாக இருந்தது. ஆனால், அது 200 தொகுதிகளுக்கு மேலான பிரமாண்ட வெற்றி எனச் சாமானியனிலிருந்து திமுகவுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த ஐபாக் நிறுவனம் வரை கூறி வந்தனர். ஆனால், தனிப்பெரும்பான்மை என்றாலும் எடப்பாடிக்கு எதிராகவே சராசரி வெற்றியைத்தான் திமுக பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணமாகக் கொங்கு மண்டலத்தில் பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்குக் கிடைத்துள்ளது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்…

Read More

இந்தியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஒருநாளில் மட்டும் 3,30,000 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாளின் இறப்பு மட்டும் 2200 ஐ கடந்துவிட்டது. இந்த திடீர் நிகழ்வு இந்தியாவின் சுகாதார கட்டமைப்பையே நிர்மூலமாக்கிவிட்டது. ஒருபுறம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக போராடும் மக்கள் என்றால், மற்றொருபுறம் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காமல் வாசலிலேயே போராடிப் பலியாகும் மக்கள். சுடுகாட்டைத் தவிர நாடே சுடுகாடாய் எரிந்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை. இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தியாவைக் காக்கப் பாகிஸ்தான் தயாராக வேண்டும் என தமது பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள். #IndiaNeedsOxygen என்ற ஹாஸ்டாக் பாகிஸ்தான் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அரசியல் வித்தியாசங்களைக் கடந்து இந்த இடத்தில் இம்ரான் கான் உதவ வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ‘நாம் எவ்வளவு வேறுபாடுகளுடன் வாழ்கிறோம் என்பது…

Read More

ஆர்.எஸ்.எஸ்இந்துத்துவாகல்விகாவி அரசியல்பாஜகவரலாறு பல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் வரலாறு படிக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டது. அதில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக மத இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மதச்சார்பற்றதாகக் கருதப்படும் தலைப்புகளை திட்டமிட்டு தவிர்த்துவிட்டது. இந்தியாவில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டுமானம் முதல் பாடத்திட்டம் வரை அனைத்து நடைமுறைகளும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC)-வின் பரிந்துரைக்கு உட்பட்டவை. இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்தும் வரைவு இவ்வளவு முக்கியமான பொறுப்பில் இருக்கும் மானியக் குழு இளங்கலை பட்டதாரிகளுக்கான வரலாறு பாடத்திட்டத்திற்கான வரைவினைக் கொண்டு வந்துள்ளது. அந்த வரைவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவா சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றை மாற்றும் வகையிலும், அடுத்த தலைமுறை மாணவர்களின் மனதை வகுப்புவாதத்தை நோக்கி நகர்த்தும் வகையிலும் அந்த வரைவு இருப்பதாக பரவலாக கல்வியாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ‘பண்டைய இந்தியா’…

Read More

அவர் பெயர் சையத் இம்ரான். ஆந்திர மாநிலம் செகந்த்ராபத்தைச் சேர்ந்தவர். அப்பொழுது வயது 30. பிடெக், கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் ஐசிஐசிஐ வங்கியில் நல்ல வேலையிலிருந்தார். தந்தை முன்னாள் மத்திய அரசு ஊழியர். ஒரு சாதாரண மனிதனுக்குரிய தன்குறிப்புதான் இம்ரானுக்கும் இருந்தது. அப்படிப்பட்ட இம்ரானின் வீட்டை ஒரு நாள் 200 போலீஸ் 4 பெரிய வாகனங்கள் சுற்றி வளைக்கிறது. இம்ரானுக்கும் குடும்பத்தாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உங்களை விசாரிக்க வேண்டும் என்று அழைக்கிறது போலீஸ். என்ன காரணம் புரியவில்லை. வலுக்கட்டாயமாக இம்ரானை பிடித்துச் சென்ற போலீஸ் வீட்டிற்கு வெளியே வந்தவுடன் ஊடகங்கள் மற்றும் மக்கள் திரளுக்கு மத்தியில் அவரது முகத்தைக் கருப்புத் துணியால் மூடுகிறது. இம்ரானின் அதிர்ச்சி அதிகரிக்கிறது. போலீஸால் இழுத்துச் செல்லப்படும் இம்ரான் சட்ட விரோத காவலில் துன்புறுத்தப்படுகிறார். தினசரி அடி. மின்சார ஷாக்குகள். இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுகிறார். அவர் தூங்கக் கூடாது என்பதற்காகவே இமைகளில்…

Read More

மோடிக்காக எதையும் தாக்கும் செவ்வாய்க் கிரகம் மனிதன். -ரானா அயூப் ( பத்திரிக்கையாளர்) மே 17 அன்று, மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியப் பத்திரிகையாளர்களிடையே ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாகப் பிரதமராக இருந்த நரேந்திர மோடி முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டுதான் அத்தகைய பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஏனெனில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்வி எதையும் விரும்பாத ஒரு பிரதமர் இருந்தார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். அதற்குப் பதிலாக அவர் மட்டும் பேசி நடிக்கும் காட்சி மட்டும் ஒளிபரப்பாகும். ஒரு சமயம், கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தபோது, அவர் தன் அருகே இடது பக்கம் அமர்ந்திருந்த, பாஜகவின் தலைவராக இருந்த, அமித்ஷாவை பார்த்து, அனைத்துக் கேள்விகளுக்கும் அமித்ஷா பதிலளிப்பார் என்று மோடி கூறினார். அமித்ஷாவும் முன்வந்து பதில்களைக் கூறினார்.…

Read More

ஃபக்கீர்கள், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினையும், முந்தைய நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றினையும், பின்வந்த அலிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், இஸ்லாமிய சமயத்தில் உள்ள பல சமயப் பெரியார்கள் கூறிய கருத்துக்களையும் , அவர் தம் பெருமைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்துபவர்களாக உள்ளனர். அவர்கள் தெருக்களில் வீடு வீடாகச் சென்று ‘தாயிரா’ என்ற தோற்கருவியால் இசை எழுப்பியவாறு சமயப் பாடல்களைப் பாடிப் பொருட்களைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்ற இரவலர் என்ற நிலையிலேயே இன்றளவும் காணப்படுகின்றனர். தமிழக முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம் ஃபக்கீர்களின் இசைப்பாடல்கள் விளங்குகின்றன என்பதே இக்கட்டுரையின் நோக்கம். முஸ்லீம் ஃபக்கீர்களின் தமிழகத்தின் ஃபக்கீர்கள் ஆன்மீகத்துறையில் சனநாயகத்தை வெளிப்படுத்திய ஃபக்கீர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆவர். இஸ்லாமியச் சமயம் சார்ந்த இரவலர்கள் தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகின்றனர். இதில் ஒரு பிரிவினர் ஃபக்கீர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இஸ்லாமிய இரவலர்கள் பொதுவாக மிஸ்கீன், முஸாஃபா, ஃபக்கீர் ஆகிய பிரிவுகளாகக் காணப்படுகின்றனர். மதுரை வட்டாரத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்களைப் போன்று, மற்ற…

Read More

பழந்தமிழ் இலக்கியங்களைப் பதம் பிரித்துப் படிக்கவே தடுமாறும் இந்தக் காலத்தில் பாடபேதங்கள், உரை விளக்கங்களின் வேறுபாடுகள், பதிப்பு மாறுபாடுகள் என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை உடனுக்குடன் விவாதிக்கும் அரிதான தமிழறிஞர்களில் ஒருவர் பொ.வேல்சாமி. வாசிப்பையே உயிர்மூச்சாகக் கொண்டு இயங்குபவர். ஆய்வாளர்கள், மாணவர்கள், செயல்பாட்டாளர்கள் எனப் பலருக்கும் அவர்களுக்குத் தொடர்புடைய புத்தகங்களையும் விவரங்களையும் அளித்து உதவுபவர். சமீபத்தில், தன்னுடைய தனிச் சேகரிப்பிலிருந்த 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலாக்கத் திட்டத்துக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்… பதிப்பு வரலாறு என்பது ஆய்வுலகில் ஒரு புதிய துறையாக வளர ஆரம்பித்திருக்கிறது. இவ்வகை ஆய்வுகளின் சமூக அரசியல் முக்கியத்துவம் என்ன? நூல் பதிப்புகள் குறித்த சிந்தனைகளை எல்லா மொழிகளிலும் எதிர்பார்க்க முடியாது. தமிழைப் போன்ற உலகின் மிகப் பழமையான மொழிகளில் மட்டுமே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழின் வரலாறு என்பது மிகக் குறைவாகச் சொன்னாலும்…

Read More

இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்! ஆர்.எஸ்.எஸ் இந்து அறநிலையத் துறைகோவில்கள் ஜக்கி வாசுதேவ் இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. அறநிலையத் துணை ஆணையராக IAS அதிகாரி இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (திருத்தப்பட்ட சட்டம் 39/1996) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அலுவலர் ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து…

Read More

‘நாங்கள் இந்துக்கள் அல்ல, ஒருபோதும் இந்துக்கள் ஆகவும் மாட்டோம்’: ஜார்க்கண்ட் சி.எம்.சோரன் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-22 க்கான செயல்முறை வேகமாக நெருங்கி வருவதால், சுமார் 120 முதல் 150 மில்லியன் ஆதிவாசிகளின் பழைய பிரபலமான கோரிக்கை ஒரு தனி மதக் குறியீட்டிற்கான (சர்னா ஆதிவாசி தர்மம்) மிகப்பெரிய வேகத்தை அடைந்துள்ளது, இது பழங்குடியினரை “இந்துக்கள்” என்று பதிவு செய்யும் ஆர். எஸ். எஸ். – இன் திட்டத்தில் ஒரு இடஞ்லை உருவாக்கக் கூடும். நாட்டின் 19 மாநிலங்களில் பரவியிருக்கும் பழங்குடி சமூகங்களின் தனி மத அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான இந்த போராட்டத்தில் பழங்குடி மாநிலமான ஜார்க்கண்ட் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜார்கண்ட் சட்டமன்றம் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியின மக்களுக்கான சர்னா பழங்குடி மத நெறிமுறையை கோரும் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மாநில முதலமைச்சரும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவருமான ஹேமந்த்…

Read More