• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»நாங்கள் இந்துக்கள் அல்ல ; பழங்குடியின மக்களின் உரிமைப்போராட்டம்
கட்டுரைகள்

நாங்கள் இந்துக்கள் அல்ல ; பழங்குடியின மக்களின் உரிமைப்போராட்டம்

AdminBy AdminApril 13, 2021Updated:May 29, 2023No Comments7 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

‘நாங்கள் இந்துக்கள் அல்ல, ஒருபோதும் இந்துக்கள் ஆகவும் மாட்டோம்’: ஜார்க்கண்ட் சி.எம்.சோரன்

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-22 க்கான செயல்முறை வேகமாக நெருங்கி வருவதால், சுமார் 120 முதல் 150 மில்லியன் ஆதிவாசிகளின் பழைய பிரபலமான கோரிக்கை ஒரு தனி மதக் குறியீட்டிற்கான (சர்னா ஆதிவாசி தர்மம்) மிகப்பெரிய வேகத்தை அடைந்துள்ளது, இது

பழங்குடியினரை “இந்துக்கள்” என்று பதிவு செய்யும் ஆர். எஸ். எஸ். – இன் திட்டத்தில் ஒரு இடஞ்லை உருவாக்கக் கூடும்.

நாட்டின் 19 மாநிலங்களில் பரவியிருக்கும் பழங்குடி சமூகங்களின் தனி மத அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான இந்த போராட்டத்தில் பழங்குடி மாநிலமான ஜார்க்கண்ட் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜார்கண்ட் சட்டமன்றம் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியின மக்களுக்கான சர்னா பழங்குடி மத நெறிமுறையை கோரும் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

மாநில முதலமைச்சரும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், பழங்குடியினருக்கான ஒரு தனி மதக் குறியீட்டை தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தினார்: “ஆதிவாசிகள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல, அவர்கள் ஒருபோதும் இந்துக்களாகவும் மாட்டார்கள், இதைப் பற்றி எந்த குழப்பமும் இருக்கக் கூடாது, இந்த சமூகம் எப்போதுமே இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்து வருகிறது, மேலும் அவர்கள் ‘பழங்குடி’ மக்களாகக் கருதப்படுவதற்கான காரணம் இதுதான்… ஆதிவாசிகள் எங்கு செல்வார்கள், அவர்கள் என்ன எழுதுவார்கள், இந்து என்றா,  சீக்கியர் என்றா, சமணர் என்றா, முஸ்லீம் என்றா அல்லது கிறிஸ்தவர் என்றா [ மக்கள் தொகை கணக்கெடுப்பில்]… இந்த ஆட்கள் [மத்திய அரசு] ‘மற்றவர்கள்’ நெடுவரிசையை அகற்றியுள்ளதை நான் அறிந்தேன். இதை அவர்கள் சகித்துக் கொள்ள தான் வேண்டும் என்று தோன்றுகிறது”.

சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 18 வது வருடாந்திர இந்திய மாநாட்டில் மெய்நிகர் சொற்பொழிவை நிகழ்த்திய பின்னர், பழங்குடியினர் இந்துக்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது சோரன் இதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இதற்கு முன்னர், என்ஐடிஐ ஆயோக்கின் ஆளும் குழுவின் ஆறாவது கூட்டத்தில் பேசிய சோரன், “ஆதிவாசி சமூகம் என்பது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் அமைப்புகள் முற்றிலும் வேறுபட்ட ஒரு சமூகம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினருக்கு ஒரு இடத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எங்கள் சட்டமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட சர்ணா ஆதிவாசி தர்ம நெறிமுறைக்கான கோரிக்கை தொடர்பான திட்டத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம். இதை இந்திய அரசு அனுதாபத்துடன் கருதுமென்று  நாங்கள் நம்புகிறோம். மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவர்களுக்கு தனி நெடுவரிசைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ”

சோரனின் கருத்துக்கள் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பிஜேபி) ஒரு கூர்மையான எதிர்வினையை ஈர்த்தது, இவர் “வத்திக்கானின் மொழியைப் பேசுகிறார்” என்று குற்றம் சாட்டியது.

முதல்வர் வத்திக்கானின் கைகளில் விளையாடுவதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டின. ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்  இது “இந்து சமாஜை பலவீனப்படுத்தும் சதி” என்று குற்றம் சாட்டி முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்த சர்ச்சைக்குள் இழுக்க முயன்றனர்.

இருப்பினும், தனி அடையாளக் கோரிக்கை ஜார்க்கண்டில் மட்டும் இல்லை; சுதந்திரம் பெற்றதிலிருந்து நாடு முழுவதும் ஆதிவாசிகள் தங்கள் தனி அடையாளத்திற்காக போராடி வருகின்றனர். சுமார் 19 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி பிரதிநிதிகள் கடந்த ஆண்டு தேசிய தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தரில் மௌனப்  போராட்டம் நடத்தினர். பல பழங்குடி அமைப்புகளும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் தனித்தனி மதக் குறியீட்டைக் கோரி மனுக்களை தாக்கல் செய்தன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 120 மில்லியன் மக்கள்தொகையில் ஆதிவாசிகள் 9.92 சதவீதமாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையான 35 மில்லியன் கோடியில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் ஜார்க்கண்டிலுள்ள  ஆதிவாசிகளாவார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆதிவாசிகள் தங்களை எழுதக்கூடிய ஒரு தனி ‘பழங்குடி மதம்’ குறியீடு இருந்தது. இது 1951-52 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது, ஆனால் அது 1961-62 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ரத்து செய்யப்பட்டது.

“பழங்குடி மக்களுடன் ஒப்பிடுகையில் சமணர்களும் புத்தர்களும் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு தனி மதக் குறியீடுகள் உள்ளன.

ஆதிவாசிகளின் தனித்துவமான அடையாளத்தின் காரணமாக இது தர்க்கரீதியாக சரியானதல்ல, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பிரிவில் பழங்குடியினரை சேர்க்க அரசாங்கம் விரும்புகிறது, ”என்று ஜார்கண்டின் தலைவரும் ஆதிவாசி செங்கல் அபியனின் கூட்டுனருமான சல்கன் முர்மு ரேடியன்ஸ் வியூஸ்வீக்லிக்கு தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு ஒரு மனுவும் அனுப்பினார்.

1951 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், மதத்திற்கான ஒன்பதாவது நெடுவரிசை ‘பழங்குடியினர்’ என்ற தலைப்பில் இருந்தது, ஆனால் இது பின்னர் அகற்றப்பட்டது. 1951 க்குப் பிறகு, இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், சமணர்,  புத்தர் மற்றுமல்லாமல் ‘மற்றவர்கள்’ என்ற தலைப்பில் ஒரு நெடுவரிசை இருந்தது ஆனால் அது 2011 இல் அகற்றப்பட்டது. இந்த வரையறை முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் விட்டுவிட்டு, மற்ற அனைவரையும் இந்துக்களின் எல்லைக்குள் கொண்டு வந்தது.

“மதக் குறியீட்டிலிருந்து ‘மற்றவர்கள் ‘ என்ற விருப்பத்தை நீக்குவது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது,” என்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பாலகாட்டின் சந்திரேஷ் மராவி கூறினார்.

“2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ​​மதக் குறியீட்டில் ‘மற்றவர்கள்’  என்ற நெடுவரிசையைக் காணவில்லை. நான் ஆட்சேபனை எழுப்பினேன், ஆனால் இந்து மதத்தைத் தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டேன்”, என்றார் மராவி.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய பழங்குடியினருக்கான ஆணையமும் இந்த குறியீட்டைச் சேர்க்க பரிந்துரைத்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

1872 முதல் 1941 வரை “ஆதிவாசி மதம்” என்று ஒரு நெடுவரிசை இருந்ததாகவும், ஆதிவாசிகள் நாட்டின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அது மாற்றப்பட்டது, அதன் பின்னர் உறுப்பினர்கள் இந்த சமூகங்களில் இந்து / கிறிஸ்தவர் அல்லது பிறர் என கணக்கிடப்பட வேண்டும் என்றாகியது.

இந்த “அநீதிக்கு”, ஆதிவாசி எழுச்சியின் நிறுவனர் ஆசிரியர் ஆகாஷ் போயம், சுதந்திரத்திற்குப் பிறகு அடுத்தடுத்த அரசாங்கங்களை குற்றம் சாட்டினார், அவரைப் பொறுத்தவரை, பிராமணிய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள். அதனால்தான் அவர்கள் பழங்குடியினரை அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ், ஆதிவாசிகளை ‘வான்வாஸிஸ்’ அல்லது வனவாசிகள் என்று நாங்கள் அங்கீகரிக்காத ஒரு பேரை எங்களுக்கு சூட்டுகிறது.

இந்துக்கள் என பழங்குடியினரை முத்திரை குத்துவது இந்து மக்களை பெருக்கி அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கிறது.

மறுபுறம், பல பழங்குடியினர் தங்களை இந்துக்கள் என்று அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர், ஏனென்றால் 1950 ல் இருந்து அவர்களுக்கு இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது, ”என்று போயம் ரேடியன்ஸிடம் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அறிக்கைகளின்படி, ஆதிவாசிகளுக்கு கலாச்சாரங்களும் மரபுகளும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை.

முன்னாள் பழங்குடியினர் ஆலோசனைக் குழு (டிஏசி) உறுப்பினர் ரத்தன் டிர்கி கூறுகையில், ஆதிவாசிகள் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஒரு தனி மத அடையாளத்தை கோருகின்றனர், ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை தங்கள் மதமாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு தனி நெடுவரிசை இல்லாததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தின் மத பிரிவின் கீழ் அவர்கள் அந்த விருப்பத்தை தேர்வு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இது ஆதிவாசி மக்களை 73 சதவீதம் குறைக்கக்கூடும் என்று அவர் அஞ்சினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை பதிவு செய்ய முடியும் என்ற ‘மற்றவர்கள்’ பத்தியை நீக்க 2016 ல் மோடி அரசு முடிவு செய்தது. இந்த முடிவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) எம்.எல்.ஏ தீபக் பிருவா கேள்வி எழுப்பினார், பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு மதம் இருக்கிறது என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதிவாசிகள் தங்கள் மதத்தை ‘இந்து’ என்று கீழே வைப்பதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிக்கும்.

ஆர்.எஸ்.எஸ்-உடன் இணைந்த அமைப்பான சேவா பாரதி, வான்வாசி கல்யாண் கேந்திரா மற்றும் வான்பந்து பரிஷத் பதாகைகளின் கீழ் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இந்து சடங்குகளையும் நிறுவ முயற்சித்து வருகிறது. 1980 களில் இருந்து, இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினர் தங்கள் மதத்தை ‘வேறு’ என்று குறிப்பிடுவதால் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் சதவீதம் குறைந்துவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது என்றும் டிர்கி சுட்டிக்காட்டினார்.

ஒரு முக்கிய கல்வியாளர், ஆர்வலர் மற்றும் கருத்தியலாளர் டாக்டர் கர்மா ஓரான், ஆதிவாசிகளின் மத உணர்வுகளுடன் விளையாடுவதை எதிர்த்து சங்க பரிவாரை எச்சரித்தார், மேலும் ‘சர்ணா தர்மம்’ மற்றும் இந்து ‘சனாதன் தர்மம்’ ஒன்றே ஒன்றுதான் என்ற பிரச்சாரத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றார்.

கிறிஸ்தவ ஆதிவாசிகளை மீண்டும் மாற்றும் போது கிறிஸ்தவமல்லாத ஆதிவாசிகள் அனைவரும் இந்துக்கள் என்று கூறிக் கொள்ள சங்க பரிவார் மிகவும் முயற்சித்து வருகிறது. 

‘சர்ணா ஸ்தலத்திலிருந்து’ மண்ணைச் சேகரித்து அவற்றை அயோத்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான சமீபத்திய முயற்சி, அதே பயிற்சியின் ஒரு பகுதியாகும் என்று அவர் குற்றம் சாட்டினார். பழங்குடியினர் தங்கள் புனித இடத்திலிருந்து மண் சேகரிப்பதை கடுமையாக எதிர்த்தனர்.

இது பழங்குடி மக்களைச் சந்திக்க முயற்சிக்கும் சங்க பரிவாரைத் தொந்தரவு செய்துள்ளது, மேலும் இந்த கோரிக்கையைத் தவிர்க்க அவர்களை வற்புறுத்துகிறது.

இருப்பினும், அவர்கள் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் நோக்கி தேவையற்ற விரல் சுட்டுகிறார்கள்.

இப்போதைக்கு, எந்த முஸ்லீம் அமைப்பும் தலைவர்களும் பழங்குடியினரின் கோரிக்கையை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.

ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் மாலிக் மொட்டாசிம் கான் கொள்கையளவில், பழங்குடி சமூகங்களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏனெனில் நம்முடையது பல இன, பல மத, பன்மொழி நாடு மற்றும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் சொந்தமாக தன்னை அடையாளம் காண அடிப்படை உரிமை உள்ளது நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களும் உள்ளன.

சுதந்திரம் பெற்றதிலிருந்து அவர்கள் தங்கள் தனி மத அடையாளத்திற்காக பாடுபடுகிறார்கள், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களின் அடையாளத்துக்கும் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, கான் கூறினார். அவர்கள் (பழங்குடியினர்) தங்கள் மதத்துடன் சர்னா என்று அடையாளம் காண விரும்பினால் இந்த கோரிக்கையால் ஆர்.எஸ்.எஸ் ஏன் பதறுகிறது என்று அவர் கேட்டார்.

தென் மாநிலமான கர்நாடகாவில், லிங்காயத்துகளும் இந்து மதத்திலிருந்து தனி மத அடையாளத்தை கோருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​லிங்காயத் மதம் ஒரு தனி மதமாக அங்கீகரிக்கப்பட்டது என்று லிங்காயத் மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் தங்கள் மக்கள் தொகை 70 மில்லியன் என்று பரவியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு லிங்காயத்துகளை சிறுபான்மை சமூகமாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஆதிவாசிகள் ஒரு தனி அடையாளத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இது தொடர்பாக ஜார்க்கண்ட் சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முடிவு  இப்போது நீதிமன்றத்தின் கையில்  உள்ளது. கட்சியின் ‘இந்து ராஷ்டிரா’ நடவடிக்கைக்கு சேதம் விளைவிக்கும் என்பதால் பாஜக அரசு மனந்திரும்புவது சாத்தியமில்லை என்று பலர் கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம் அதன் கருத்தியல் வழிகாட்டியின் (ஆர்.எஸ்.எஸ்) கீழ் கோரிக்கையை ஏற்காது என்று பழங்குடி ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். இருப்பினும், ஜார்கண்டின் 32 பழங்குடி குழுக்கள் “சர்னாவை”   ஒரு குறிப்பிட்ட விருப்பமாக மதத்திற்கான நெடுவரிசையில் சேர்க்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் அவர்கள் கணக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இது தவிர, ஆதிவாசிகள் தங்கள் வடிவங்களை பேனாக்களால் நிரப்ப வேண்டும், பென்சில்களில் அல்ல, ஏனென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்காளர்கள் பெரும்பாலும் தங்கள் மதத்தை இந்து மதத்திற்கு வலிந்து  மாற்றுகிறார்கள். ஏற்கனவே அனைத்து மதங்களையும் அழித்து ஒரே ஒரே இனம் என அனைத்து மதக்குளுக்களையும் அழிக்க முயற்சிக்க அரசு இது போன்ற சிறுபான்மை குழுக்களை மட்டும் தப்பிக்கவிடும் என்பது நிச்சயம் சிந்திக்கவேண்டிய விஷயம்.

எழுத்தாளர் : அப்துல் மாரி மசூத்

தமிழில் : ருகையா தஸ்னீம்

Loading

இந்துக்கள் பழங்குடிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

காஷ்மீர்: திரைப்படங்களால் திரிக்கப்படும் இராணுவ தேசம் (3)

December 14, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.