• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»10% இட ஒதுக்கீடு பச்சையான அயோக்கியத்தனம்
குறும்பதிவுகள்

10% இட ஒதுக்கீடு பச்சையான அயோக்கியத்தனம்

AdminBy AdminJuly 27, 2019Updated:June 1, 20232,389 Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கத் தேவையில்லை. அதுவும் தமிழகத்தில் தேவையே இல்லை. எவ்வளவு ஏழை என்றாலும் ஒரு பிராமணர் பிழைத்துக்கொண்டு கெளரவமான வாழ்வு வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காத பிராமணர்கூட பிராமணர் என்பதால் மட்டுமே த்விஜஸ்தம்பம் இல்லாத வைதீகப் பிரதிஷ்டை கோயில்கள் (தனியார் கோயில்களில்) அர்ச்சகராக இருக்க முடியும். புரோகிதம், வைதீக காரியங்களுக்குச் சென்று பிழைத்துக்கொள்ள முடியும்.

இட ஒதுக்கீட்டால் வாழ்க்கையை இழந்த பிராமணர் யாருமே இல்லை அதிகபட்சம் அவர் படிக்க விரும்பிய உயர்கல்வியை, பெற விரும்பிய அரசுப் பணியை இழந்திருப்பார். 69% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அரசுப் பணிகளிலும் உயர்கல்விகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல துறைகளில் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் திறமையும் அறிவும் காரணமாக இருக்கும் என்றாலும் இவற்றுக்கான திறமையையும அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான சமூகச் சூழல் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கும் பிராமணருக்கு எதைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று சொல்லிக்கொடுக்க அவரது சுற்றத்தில் யாரேனும் ஒருவராவது இருப்பார்கள். எனக்கு குடும்பத்திலேயே இருந்தார்கள். முதல் தலைமுறைப்பட்டதாரிகளான் என் அப்பாவும் சித்தப்பாவும் அத்தைகளும் மாமாக்களும் ஆங்கிலப் படிக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புகட்டிக்கொண்டே இருந்தார்கள் இன்று நான ஓரளவு நல்ல நிலையில் இருப்பதற்கு அது பெருமளவில் காரணம்.

மாறாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த பலருக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. பல சாதிகளில் இப்போதுதான் முதல்தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். சில சாதிகளில் இன்னுமும்கூட உருவாகவில்லை. எனவே சமூகரீதியாக இன்னும் பின்தங்கியுள்ள சாதிகளைக் கண்டறிந்து இட ஒதுக்கீடு பலன்கள் அவர்களைச் சென்றுசேர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும், உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். கலைஞர் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தது அத்தகையதுதான்.

ஆனால் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டை வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினருக்குக் கொடுப்பது பச்சையான அயோக்கியத்தனம். அதுவும் பல மாநிலங்களில் அவர்கள் இருக்கும் விகிதத்தைவிட அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மேலும் 8 லட்சம் வருமான வரம்பை நிர்ணயித்திருப்பது உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின் தங்கிய பிராமணர்களைக் காட்டிலும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க பிராமணர்கள் மற்றும் இதர உயர்சாதியினருக்கே அதிக சாதகத்தைக் கொடுக்கும்.

ஸ்டேட் பாங்க் கட் ஆஃப் விவகாரத்தைப் பார்த்தால் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை திரும்பிவிடும் போலிருக்கிறது. அதாவது பிராமணர்களே அதிக அரசு பதவிகளில் வருவார்கள் போலிருக்கிறது. இது துளியும் நியாயமற்றது. இத்தனை ஆண்டு சமூக நீதி அரசியலுக்கும் அவற்றால் விளைந்த நன்மைகளுக்கும் சாவுமணி அடிப்பதைப் போன்றது.

அன்புள்ள பிராமணர்களே அரசு பணிகளிலும் உயர்கல்வியிலும் உங்கள் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தைப் பிடித்து வைத்திருந்தனர். அதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு இன்னுமும் கூட முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்குக் கொஞ்சம் வழிவிடுங்கள்.

(பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்)

கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன்

Loading

EWS பொருளாதார இட ஒதுக்கீடு
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம்

July 31, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.