Author: முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்
இந்தியாவில் மக்களை அதிதீவிர பதட்டத்தில் வைத்திருக்கும் இரண்டு நாட்கள் உள்ளன. ஒன்று தேர்தல் நாட்கள்; மற்றொன்று ஊர்வலத்தைக் கொண்டிருக்கும் இந்துப் பண்டிகை நாட்கள். ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் அமைதியாகக் கொண்டாடும் சாதாரண இந்து மக்களை விட்டுவிடுங்கள், அவர்கள் எவ்வித நயவஞ்சக எண்ணங்களும் இன்றி வழக்கமான பண்டிகை நாட்களாக அவற்றைக் கடந்து விடுகின்றனர். ஆனால் காவி பயங்கரவாதிகள் நடத்தும் ஊர்வலங்கள் அப்படியல்ல; அதில் கலவரங்கள் ஏற்படாவிட்டால் தான் அது வியப்புக்குரிய ஒன்று. இந்து பயங்கரவாதிகள் தங்களின் ஊர்வலங்களில் எப்படி பிரச்னை, கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு சமீபத்திய ஹரியானா மாநிலத்திலுள்ள மேவாத் மாவட்டத்தின் நூஹ் பகுதியில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பிரஜ்மண்டல் யாத்ரா (கிருஷ்ணரை பற்றிய பாதயாத்திரை) என்பது ஆண்டுதோறும் ஜூலை 31ஆம் தேதி ஹரியானாவின் மேவாத் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. இது VHP நிர்வாகிகளால் 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு…
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதன் அரசியல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் மக்கள் அனைவருக்கும் பயனளிக்காத திட்டங்களைக் காட்டிலும் சமூகத்தின் ஒருசார் பிரிவினரின் குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. அதனை பொதுமக்கள் அரும்பாடுபட்டு, போராட்டங்கள் நடத்தி, அது தடியடியாக, அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக மாற்றமடைந்து பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு அவை திரும்ப பெறப்படும் இதுவே வழக்கம். ஆனால் சமீபத்தில் வெளியாகி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சில இதற்கு விதிவிலக்காக திகழ்கின்றன. பொதுமக்களின் போராட்டங்கள் விவாதங்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டி அநீதமாக, அடக்குமுறையின் பெயரில் கடந்த ஆகஸ்ட் 5, 2019இல் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 9 அன்று முஸ்லிம்களின் நிலமாக இருந்த பாபர் மசூதி இருந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற பாஜகவின் நீண்ட கால அநீதமான வாக்குறுதிகள்…
நாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டி, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த உமர் காலிதை சிறையில் அடைத்து நேற்றுடன் 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. முஸ்லிம் சிறுபான்மையினர் மீது பாரபட்சம் காட்டும் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தியதற்காகவே உமர் காலித், ஆளும் பாஜக அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் முழு பழியையும் முஸ்லிம் ஆர்வலர்கள், மாணவ தலைவர்களின் மீது சுமத்திய மத்திய அரசு, உமர் காலிதை UAPA என்ற பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்தது. உமர் காலிதை சிறைக்கு அனுப்ப பாஜக அரசாங்கம் செய்த அத்துமீறல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், நம்பகத்தன்மையற்ற சாட்சிகள் போன்றவற்றை வைத்து, பொய்யான வாதங்களைப் பயன்படுத்தி, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் மூலம் அவரை திகார் சிறைக்கு அனுப்பியது. ஜனநாயக முறையில் சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதன்…
21 ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக மாறிவிட்டது சமீபத்தில் நடந்த ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து. ரயிலில் பயணித்தவர்களில் குறைந்தபட்சமாக 270 இறந்திருக்கின்றனர் 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். உள்ளூர் வாசிகள் முதல் உலக மக்கள் வரை நாடு மொழி இன மத பேதமின்றி அனைத்து விதமான மக்களும் தங்களது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள். தன்னார்வமாக ஏறக்குறைய இளைஞர்கள் 2000 பேர் ரத்ததானம் வழங்கி இருக்கின்றனர். உள்ளூர் மக்களில் பலரும் தங்களது புறத்திலிருந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். உலகமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்திய அவ்வேளையிளும் இந்துத்துவாதிகள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? வேரென்ன இந்த விபத்தைச் சாதமாகக் கொண்டு வழக்கம் போல தங்களது விஷமத்தனமான கருத்துகளை மக்களின் மத்தியில் பரப்ப முயன்றிருக்கின்றார்கள். இந்திய நாட்டில் எங்கு எந்த தவறு நடந்தாலும், அதனை வாய்ப்பாகக் கொண்டு இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரத்தை எப்படிப் பரப்புவது என்று…
கடந்த செவ்வாயன்று வெளியான ஆய்வு ஒன்று ‘தொண்ணூறுகளின் முற்பகுதியிலிருந்து உலகின் பெரிய ஏரிகள், நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சுருங்கிவிட்டன, முக்கியமாகப் பருவநிலை மாற்றம், விவசாயம், நீர் மின்சாரம், மனித நுகர்வுக்கான நீர் பற்றாக்குறை பற்றிய விவசாயிகளின் கவலைகளும் தீவிரமடைந்துள்ளன’ எனக் கூறுகிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான காஸ்பியன் கடல் முதல் தென் அமெரிக்காவின் டிடிகாக்கா ஏரி (Lake Titicaca) வரை இருக்கக் கூடிய உலகின் மிக முக்கியமான சில நன்னீர் ஆதாயங்கள் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக ஆண்டுக்கு சுமார் 22 ஜிகா டன்கள் என்ற மொத்த விகிதத்தில் தண்ணீரை இழந்திருப்பதாகச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான லேக் மீட்டின் அளவை விட 17 மடங்கு அதிகம். சயின்ஸ் இதழின் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மேற்பரப்பு நீர்வியலாளர் ஃபாங்ஃபாங் யாவ், இயற்கை ஏரிகளின் சரிவிற்கு 56% காலநிலை வெப்ப மயமாதலும் மனித நுகர்வும்…
இதுவரை நாம் பார்த்த குஜராத்தின் துறை ரீதியான தகவல்கள், அரசாங்கத்திற்குச் சாதகமாகவும், சாதாரண பாமர மக்களுக்குப் பாதகமாகவும் இருந்திருக்கலாம். மேலும் குஜராத் மக்களின் அன்றாட வாழ்க்கையை இத்தகைய துறைகளின் பிற்போக்குத்தனம் மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் குஜராத் மாநிலத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தி காட்டுவதற்கான உந்து சக்தி அம்மாநிலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அழிக்க முடியாத கறையை மறைப்பதற்காகத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 2002 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவிக்கு வந்த முதல் ஆண்டிலேயே குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு படுகொலைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி பெரும்பான்மை இந்து மக்களை, சிறுபான்மை முஸ்லீம் மக்களிடமிருந்து பிரித்துக் காட்டி, தெளிவான திட்டங்களுடன் பிரித்து வாக்கு வங்கிகளாக மாற்றியது. இந்துத்துவ வாதிகள் முஸ்லிம் மக்களின் மீது வைத்திருந்த அருவருப்பை செயலளவில் செய்து காட்டி, முஸ்லிம்களை அவர்கள் பிறந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற சூழ்நிலையை நிரந்தர வடுவாக உருவாக்கியது ஆர்எஸ்எஸ் காவி கார்பரேட் மோடியின்…
கர்நாடக கல்வித்துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முன் பல்கலைக்கழகப் பொதுத்தேர்வில் (12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இணையானது) மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் தபசும் ஷேக். தபசும் இந்த ஆண்டு கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, இந்தி, உளவியல், சமூகவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைக்குள்ளானது ஹிஜாப் தடை என்பதை நாம் அறிவோம். முஸ்லிம் பெண்கள் மீதான இப்படிப்பட்ட உளவியல் ரீதியான நெருக்கடியையும் எதிர்கொண்டு மாநிலத்தின் முதல் மாணவியாக தபசும் ஷேக் வந்திருக்கிறார். இது சங் பரிவாரத்தினருக்கு ஒரு சம்மட்டி அடி என்றால் அது மிகையல்ல. ஹிஜாப் எதிர்ப்பு: இந்துத்துவர்களும் லிபரல்களும் ஹிஜாபுக்கு எதிரான மனநிலை பொதுப்புத்தியில் இருந்து வருவது ஒரு புதிய போக்கு அல்ல. அது மேற்கத்திய காலனிய மனநிலை நீட்சி. மேற்கத்திய நாடுகளில் என்னதான் ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தபோதிலும்…
ஹிந்துத்துவத்திற்கு எதிராக திரைப்படத்திலோ, பாடல்களிலோ, கவிதை வழியாகவோ, கட்டுரை வழியாகவோ தமது கருத்தை வெளிப்படுத்தி விட்டால் போதும் அந்த இயக்குனர்களையோ அல்லது பாடல் ஆசிரியர்களையோ, கவிஞனையோ, எழுத்தாளரையோ தமது நாவிற்கு ஏற்ப வசைப்பாடி தாக்கி துரத்தப்படும் நிலை நிலைநாட்டப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில் 2500 முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்த ஆட்சியாளர்களுக்கு முழுமையான நீதி கிடைத்து விடும் என்று எவ்வாறு கூற முடியும்? “இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா சிறுபான்மையானதாக இருந்து பாதிக்கப்படுகிறார்கள்? சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் கூடத்தான் இந்த சமூகத்தில் கொல்லப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்தலாமே! ஏன் திரும்பத் திரும்ப இந்த முடிந்து போன விஷயத்தையே பேசிக் கொண்டு அரசியல் செய்கிறீர்கள்” என்று நல்லவர்களைப் போல வியாக்கியானம் பேசிக்கொண்டு வரும் மனிதர்களும் அங்கு இருக்கிறார்கள். இவர்களது நோக்கம் எல்லாம் “நடந்தது, நடந்து முடிந்து விட்டது, இனி மாற்றத்தை நோக்கி செல்லலாம்” என்பதுதான், ஏனெனில் இனக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இவர்களது…
ஒரு சமுதாயம், மிகச் சிறந்த சமுதாயம், மிக மிகச் சிறந்த வாழ்க்கை முறையை நிரந்தர சொத்தாக வைத்துள்ள சமுதாயம், சத்திய பாதையை லட்சிய நோக்காக கொண்ட சமுதாயம், தற்காலிக ஆசைகளின் மத்தியில் தூய கொள்கையைக் கொண்ட சமுதாயம், எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கப்பட வேண்டும்? கால ஓட்டத்தின் சுழற்சியில் 1400 வருடங்கள் கடந்துவிட்டன. தூய கொள்கை தூய வடிவில் தான் இருக்கிறது. இறைவனுடைய கட்டளைகளை தான் கட்டுமர கட்டையில் கடத்திவிட்டோம். காவி பயங்கரவாதிகள் கல்வித் துறையில் நுழைந்து விட்டார்கள் காவல்துறை பயங்கரவாதிகள் காவிச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். நீதிமன்ற நீதிமான்கள் பேனா முனையின் வலிமையை குறைத்து கொண்டிருக்கிறார்கள், சட்டத்துறை நிபுணர்கள் சட்டத்தை சட்டைப்பையில் வைத்து, வட்டத்தை வரைவது போல வார்த்தைகளை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.மிகச் சிறந்த கொள்கை கொண்ட சமுதாயத்தின் செயல்வீரர்கள் தனது சத்திய மார்க்கத்தை நிலைநாட்டவும் இறைவனின் கட்டளைகளின் மூலம் மனித சமுதாயத்தை மீட்டெடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.…

 
									 
					