• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»அக்பர்கானை கொன்ற இராஜஸ்தான் காவலர்கள்
கட்டுரைகள்

அக்பர்கானை கொன்ற இராஜஸ்தான் காவலர்கள்

ஆர். அபுல்ஹசன்By ஆர். அபுல்ஹசன்July 23, 2018Updated:June 1, 20232,437 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

பெஹ்லுகான் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு அக்பர்கான் கொல்லப்பட்டுள்ளார்..

எந்த காரணத்திற்காக பெஹ்லுகான் கொல்லப்பட்டாரோ அதே காரணத்திற்காகத்தான் அக்பர்கானும் கொல்லப்பட்டுள்ளார்..

இராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் மாடுகளை சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பிய அக்பர்கானை பசு பயங்கரவாதிகள் அடித்து காயப்படுத்தியுள்ளனர். ஆனால் கொலை செய்தது காவல்துறையினர்..

அதிகாலை ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பொறுமையாக காலை நான்கு மணிக்கு காவல்நிலையத்தில் இருந்து சரியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அப்போது அக்பர்கான் இறந்துவிட்டிருந்தார்.

இடைப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அக்பர்கானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை அருகில் இருந்த கொட்டகைக்குள் பாதுகாப்பாக அடைத்து வைத்துவிட்டு, வழியில் வாகனத்தை நிறுத்தி களைப்பு தீர டீ சாப்பிட்டுவிட்டு பிறகு அக்பர்கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அக்பர்கானை காவலர்கள் வாகனத்திற்குள் வைத்து தாக்கியதாக நேரில் கண்ட பெண் என்டிடிவி நிருபரிடம் தெரிவித்துள்ளார்.

அக்பர்கானின் கொலையில் பசு பயங்கரவாதிகளுடன் காப்பாற்றச் சென்ற காவல்துறைக்கும் தொடர்பிருக்கிறது தெளிவாக தெரிகிறது.

ஆனாலும் அக்பர்கான் மாடுகளை வாங்கி வந்தாரா அல்லது திருடினாரா என்றும், மாட்டை அவர் பால் கறக்க வாங்கினாரா அல்லது இறைச்சிக்காக வாங்கினாரா என்றுதான் விசாரணை நடக்கும்..

அதாவது மாட்டிற்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு மனிதனின் மரணத்திற்கு எந்த விசாரணையும், நீதியும் கிடைக்காது.

அபுல் ஹசன்

Loading

Akbharkhan Mob lynching Pehlukhan
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ஆர். அபுல்ஹசன்

Related Posts

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.