Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்பூர்வமான இனப்படுகொலை. ————————————————- ——- சங்பரிவாருக்கு ஆதரவான சமூக சூழ்நிலையை உருவாக்குவதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கும் பல நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள், உடனடியாக தயாரிக்கப்படும் குற்றவாளிகளின் பட்டியல், கைதுகள், பயங்கரவாதச் சட்டங்களைத் திணித்தல், நீண்ட விசாரணைகள், ஜாமீன் மறுப்பு போன்ற விஷயங்கள் மிகத் திறமையான திரைக்கதைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அவற்றிற்கான உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லாமலேயே. இறுதியில் தீர்ப்பு வரும்போது, சிலர் தண்டிக்கப்படுவார்கள், பலர் விடுவிக்கப்படுவார்கள். இதுதான் காலா காலமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பாசிச விளையாட்டில் அப்பாவி கைதிகளும், அவர்களது உறவினர்களும், பாசிசத்தின் அதிகார பசிக்காக பலியான அப்பாவி மக்களும், அவர்களது உறவினர்களது வாழ்க்கையும்தான் இறுதியில் சீரழிந்து போகும். எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் சங்பரிவார் உருவாக்கிய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு முதல் எத்தனை, எத்தனை மனிதர்கள் இவ்வாறு பலி செய்யப்பட்டுள்ளனர். மதானியும், ஜக்கரியாவும், சித்திக் காப்பனும், உமர்…

Read More

கர்நாடகாவில் உருவான ஹிஜாப் பிரச்சனையொட்டி இந்தியாவில் நடந்து வரும் செயல்பாடுகளை கண்டித்தும் விமர்சித்தும் டிவிட் இட்ட அமெரிக்க தூதரை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். இயல்பானதும் கூட. மதச்சுதந்திரம் தொடர்பான விஷயத்தில் அமெரிக்காவின் சர்வதேச தூதராக இருக்கும் ரசாத் ஹுசைன், ஹிஜாப் தடை என்பது மதச் சுதந்திரத்தின் மீதும் பெண்களின் மீதும் நடைபெறும் வரம்பு மீறல் என குறிப்பிட்டிருந்தார். இதைக் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி அரிந்தம் பக்ஷி, விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்றும் இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளும் அமைப்புச் சட்டமும் இவ்விஷயத்தை உரியமுறையில் கையாளும் என்றும் பதிலளித்தார். இந்திய நாட்டின் உட் பிரச்சினைகளை குறித்து வெளியிலிருந்து அறிக்கைகள் அளிப்பது சரியானதல்ல என்றும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வமான இடத்தில் இருந்துகொண்டு அளிக்கும் பதில் என்பதால் அது இப்படித்தான் இருக்கும். அதே நேரத்தில் அந்த அலுவலரின் பதிலில் பல…

Read More

மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு என்ற பெயரால் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்திலே மீண்டும் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 2021ல் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்தை 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்த புதிய தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்ற அண்ணாவின் பொன்மொழியை மீண்டுமொருமுறை தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவியின் செயல்பாடு நினைவுபடுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு பெரும் விவாதத்தை அரசியல் அரங்கில் உருவாக்கியிருந்தது. இதற்கு எதிராக அதிமுக-பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். நீட் எதிர்ப்பு என்பதை கடந்து மாநிலங்களின் அதிகாரம், ஒன்றிய அரசின் அதிகாரத் திணிப்பு, ஃபெடரலிசம் தொடர்பான விவாதங்களின் பக்கம்…

Read More

கர்நாடகாவில் உடுப்பி அரசு பெண்கள் பியுசி கல்லூரியில் 11,12 வகுப்புகளில் படிக்கும் 8 முஸ்லிம் மாணவிகளை ஹிஜாப் – தலை முக்காடு அணிந்ததன் பெயரில் வெளியேற்றிய நிகழ்வானது நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மை எதிர்கொண்டு வரும் நெருக்கடியைத்தான் எடுத்துச் சொல்கிறது. கடந்த டிசம்பர் 27 அன்று சீருடையும் தலையில் ஹிஜாபும் அணிந்து கொண்டு வந்த மாணவிகளுக்கு சீருடையின் காரணத்தைச் கல்லூரியின் கதவுகள் அடைக்கப்பட்டன. தங்களது படிப்பை கைவிட தயாராக இல்லாத மாணவிகள் கல்லூரியின் கேட்டுக்கு வெளியே இருந்து படிக்க தீர்மானித்தனர். விஷயம் தீவிரம் அடைவதைக் கண்ட இந்துத்துவ பாசிச அமைப்புகள் தலையிட ஆரம்பித்தனர். அதிகாரிகளும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து கல்லூரியை மூடினாலும் மாணவிகளின் கோரிக்கை கீழ்ப்படிய மாட்டோம் என்ற முடிவை எடுத்தார்கள். தலை முக்காடு அணிந்ததன் பெயரில் மாணவிகளை வெளியேற்றிய நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என கர்நாடகா துவக்க மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கல்லூரி முதல்வரிடம் அறிவித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தில்…

Read More

ஆட்சியும் அரசாங்கமும் விமர்சிக்கப்படுகின்றபோது அதனை நேர்மறையாக எதிர் கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களின் மதத்தையும் இனத்தையும் பிரச்சினைகளுக்கு உட்படுத்துவத்துவதை கவலையோடுதான் நாம் பார்க்க வேண்டும் பிறமத வெறுப்பும் வகுப்பு வாதமும் இனவெறியும் நிரந்தர நோயாக மாறிப்போன ஒரு மோசமான நிலைமையில்தான் இந்தியர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனித உணர்வுகளை பாதிக்கக்கூடிய இந்தத் தீரா நோயின் பலன்தான் இனக் குருட்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களும் காதுகளும் உண்மையை அறிவதற்கோ சரியான தகவல்களை ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இருக்காது. உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிராக குறைப்பார்கள். இருப்பதை எடுத்துச் சொல்பவர்களை ஏளனத்தோடு இழிவுபடுத்துவார்கள். பின் சத்திய காலத்தில் உண்மைகளுக்கு இடமில்லை என்றும் இனி வரும் காலம் பெரும் பொய்களின் காலம் என்றும் நிரூபிப்பார்கள். இந்த நோய் அரசாங்கத்தையும் ஊடகங்களையும் பாதித்தால் ஏற்படும் இன்னல்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும். கும்பல் படுகொலைகளுக்கும் இனவெறி தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கான கூச்சல்களுக்கும்…

Read More

முக்கியமான 5 மாநிலத் தேர்தல் போராட்டக் களத்தில் இருக்கின்றபோதும் மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவும் கூட்டாட்சியை சிதைக்கவும் மோடி அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. புதிய ஒவ்வொரு சட்ட உருவாக்கத்தின் போதும் சட்டத் திருத்தங்களின் போதும் முழு அதிகாரத்தையும் புதுதில்லியில் மையப்படுத்துவதற்குண்டான முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நிதி ஒருங்கிணைப்பு என்ற ஊகமயமான பொருளாதார திட்டத்தை ஜிஎஸ்டின் ஊடாக உருவாக்கினார்கள். மாநிலங்களின் பொருளாதார உரிமையும் பாதுகாப்பும் ஒன்றியத்தின் அகங்காரத்தின் கீழ் அடிமைப்பட்டு போனதுதான் ஜிஎஸ்டின் ஊடாக நடந்தது. கூட்டுறவு துறைகளில் சட்டத் திருத்தம், வங்கி கட்டுப்பாட்டு திருத்தம், NIA சட்டத்திருத்தம் போன்ற சமீப காலத்தில் சங்பரிவார் அடுப்பங்கரையில் வேகவைத்து எடுத்ததும் வெந்து கொண்டிருப்பதுமான ஒட்டுமொத்த சட்டங்களும் கூட்டாட்சிக்கு வேட்டு வைப்பதுதான். இதோ, இப்போது இந்திய ஆட்சியியல் சேவை துறையான IAS (கேடர்) சட்டப்பிரிவு 6ல் திருத்தங்களைச் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். ஜனவரி 25க்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கருத்துக்களை கேட்டு ஒன்றிய அரசு அனுப்பிய…

Read More

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை குறித்து  உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுஒன்றிய மாநில அரசுகளுக்கும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றங்களுக்கும் சிலஉத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேற்படி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் விஷயத்தில்பல்வேறு கருத்து முரண்பாடுகள் உருவாகி உள்ளது. பஞ்சாப் மாநில அரசின் தவறு என்றுஒன்றிய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகச் செய்யும் தேர்தல்நாடகம் என பஞ்சாப் மாநில அரசும் பிற எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.ஜாப் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இவ்விஷயத்தை தங்களுக்குசாதகமாக மாற்றி பிரச்சாரம் செய்வதற்காக பாஜக முதலில் முனைப்பு காட்டியது. ஒன்றியஅரசும்பஞ்சாப் மாநில அரசும் தனித்தனியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அவ்விசாரணைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரதமர் இரண்டு மணி நேரம் சாலை வழியாக பயணம் செய்வதற்கு முடிவு எடுத்தது யார்?, அதற்கு என்ன காரணங்கள்?, ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டாம் என இறுதி நிமிடத்தில் முடிவு எடுக்க என்ன காரணம்?, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவின்,…

Read More

சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்கள் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நாட்டிலுள்ள நூற்றுக்கும் அதிகமான பிரபல முஸ்லிம் பெண்களை ஏலத்திற்கு விட்ட ‘புல்லி பாய்’ என்ற பெண் விரோத, துவேச ஆப்பினுடைய விஷயத்தில் 2 விசாரணைகள் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் உத்தரகாண்டைச் சேர்ந்த ஸ்வேதா சிங்கை மும்பை சைபர் காவல்துறை கைது செய்திருக்கிறது. பிறகு அசாம் ஜோர்ஹர்ட்டை சேர்ந்த பொறியியல் மாணவன் நீரஜ் பிஷ்னோய்தான் இந்த ஆப்பை உருவாக்கியதில் முக்கியமானவன் என டெல்லி காவல்துறை குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. உத்தரகாண்டில் இருந்து மாயங்க் அகர்வால் என்ற 21 வயது இளைஞனையும் பெங்களூருவில் இருந்து விஷால் குமார் என்ற பொறியியல் மாணவனையும் மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்து விசாரணையை அதிவேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்றுள்ள நிலையில்தான் அதுவரைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்த டெல்லி காவல்துறை தற்போது களத்தில் இறங்கியுள்ளது. ‘ புல்லி பாய்’க்கு பின்னால் இருந்து செயல்பட்டது…

Read More

புதிய வருடம் காலடி எடுத்து வைக்கின்ற போது மீண்டும் ஒரு கொள்ளை நோயின் மேகங்களால் உலகம் இருள் மூடிக் கிடக்கிறது. கோவிடின் மற்றொரு வடிவமான ஓமைக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. தினந்தோறும் வரும் செய்திகளின் அடிப்படையில் நமது நாடும் அதிலிருந்து விதிவிலக்கல்ல என்றே தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களில் நடந்ததைப் போன்றதொரு ஊரடங்கை நோக்கித்தான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகமே கிராமம் ஆகிப்போன உலகமயச் சூழலில் எங்கேனும் ஒரு சிறு தேசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உலகம் முடங்கிப் போகும் சூழல்தான் தற்போது உள்ளது. இப்புது வருடத்திலும் மனித சமூக முன்னேற்றத்தில் ஓமைக்ரான் ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இச்சூழலில் நம்மால் முடங்கிப் போய்விட முடியாது, முன்னேறிச் சென்றே ஆகவேண்டும். மனித அறிவின், தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெகுவிரைவாக இந்த கொள்ளை நோய் விரட்டியடிக்கப்படும் என்ற விஷயத்தில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வழியில் அறிவியல் உலகம் வெகுதூரம் பயணப்பட்டு…

Read More

இஸ்லாம் அல்லது முஸ்லிம் சமூகம் தன் நிலையிருந்து கீழ் நோக்கி பயணிக்கின்ற போது அதனை அதனுடைய உண்மையான இடத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த உலகத்தில் பல்வேறு அறிஞர்களும் தலைவர்களும் பாடுபட்டுள்ளனர். உமர் இப்னு அப்துல் அஜீஸ் துவங்கி சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி வரை அந்த பட்டியல் மிக நீளமானது. இந்த முஜத்திதுகள் மேற்கொண்ட தஜ்தீத் வேலைகளின் காரணத்தினால்தான் இஸ்லாம் இன்னமும் உயிர்த்துடிப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி மற்றும் சஹீத் செய்யது குதுபின் சிந்தனை நீட்சிகள்தான் இன்றைய நவீன இஸ்லாமிய உலகை, அறிஞர்களை ஆட்கொண்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தஜ்தீத் – மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேசச் சூழல்களுக்கு தக்கவாறு அவைகள் திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. ராஷிதுல் கனூஷி, சயீது ரமலான், சங்கீதி, எர்துகான் போன்ற…

Read More