Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»மாயமாய் மறைந்த மசூதி!
கவிதை

மாயமாய் மறைந்த மசூதி!

AdminBy AdminSeptember 30, 2020Updated:June 6, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

பாபர் மசூதி என்பது
ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை
நினைத்துக்கொண்டிருந்தீர்கள்

இல்லை அது
யாருடைய கையிலோ இருந்த
மதுக்கிண்ணம்
தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து
உடைந்து விட்டது

பாபர் மசூதி என்பது
உறுதியான ஒரு பழங்கால கட்டிடம்
என்று இதுவரை சொல்லப்பட்டது
இல்லை அது யாரோ
கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்
அது யார் கையிலோ உணர்ச்சிவசத்தால் மோதி
சிதறி விட்டது

இருபத்தெட்டு ஆண்டுகள்
நீண்ட விசாரணைக்குப்பின்
இந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

வழங்கும் நீதிகளில்
ஒரு தொடர்ச்சி இருக்கிறது
ஒரு கட்டுக்கதையின்
ஒவ்வொரு அத்தியாயமும்
எந்தக்குழப்பமும் இல்லாமல்
தெளிவாக எழுதப்படுகிறது

எதுவும் திட்டமிடப்படவில்லை
எல்லாமே தற்செயலாக நடக்கின்றன
குழந்தைகள் கட்டிய மணல்வீடு
ஒரு காற்றில் கலைவதுபோல
பாபர் மசூதி கலைந்து விட்டது

அந்த ஸ்தூபியின் மீது ஏறி நிற்பவர்கள் யார்?
அது ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியாக இருக்கக்கூடும்
கேமிராக்கள் முன்
’இதற்காக பெருமைப்படுகிறோம்’ என
முழங்கியவர்கள் யார்?
அது ஒரு திரைப்படக் காட்சியே தவிர
உண்மையல்ல

திட்டமிடப்பபடாமல்தான்
ரத ஊர்வலங்கள் நாடு முழுக்கச் சென்றன
திட்டமிடப்படாமல்தான்
ஒன்றரை இலட்சம் பேர்
மசூதியின் முன் திரண்டார்கள்
திட்டமிடப்படாமல்தான்
சக்திவாய்ந்த கடப்பாறைகள்
காற்றில் எங்கோ தானாக வந்து சேர்ந்தன
திட்டமிடப்படாமல்தான்
தலைவர்கள் வெறியூட்டும் உரைகளை நிகழ்த்தினார்கள்
திட்டமிடப்படாமல்தான்
அங்கு ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மசூதி
காற்றில் மாயமாய் மறைந்துவிட்டது
திட்டமிடப்படாமல்தான்
நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன
திட்டமிடப்படாமல்த்தான்
சூலாயுதங்களில் ரத்தம் பெருகியது
திட்டமிடப்படாமல்தான்
குண்டுகள் வெடித்தன
திட்டமிடபடப்படாமல்தான்
ஒரு காவிநிற பேரசு
அந்த இடிபாடுகளின்மீது எழுந்தது

நீங்கள் திட்டமிடாமல் ஒரு கொலை செய்யலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு வீட்டை உடைக்கலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு நகரத்தை எரிக்கலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு மதத்தினரை அகதிகளாக்கலாம்
எந்தக் குற்றத்தையும் திட்டமிடாமல் செய்தால்
நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்
நீங்கள் இந்த தேசத்தை ஆள்வீர்கள்

கூட்டு மனசாட்சியின் பெயரால்
நிரபராதிகளை தூக்கிலிடலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
குற்றவாளிகளை நிரபராதிகளாக்கலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
ஆலயங்களைத் தகர்க்கலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
அதன் மேல் வேறு ஆலயங்களைக் கட்டலாம்

புனித யுத்தத்தில்
படைகளை வழி நடத்தியவர்களே
அவர்களை தடுத்தார்கள் என
தீர்ப்புகள் எழுதப்படுகின்றன

மேல் முறையீட்டில்
இன்னும் சில தீர்ப்புகள் வர இருக்கின்றன
அங்கு மசூதி என்று எதுவும் இருக்கவில்லை எனவும்
அவை இடிக்கப்படுகிற காட்சிகள் அனைத்தும்
மாயாவிகள் உருவாக்கிய
மாயத்தோற்றங்கள் எனவும்
அங்கு பறந்தவை எல்லாம்
காவிக்கொடிகள் அல்ல
சமாதானத்தின் வெள்ளைக்கொடிகள் எனவும்

இன்னொரு முறை உரத்து முழங்குங்கள்
ஒரு நாடு
ஒரே மதம்
ஒரே நீதி

– மனுஷ்ய புத்திரன்

பாபரி மஸ்ஜித்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

இராமர் கோயில்: இந்துத்துவாவின் வெற்றி இந்தியாவின் தோல்வி

January 18, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

அடக்குமுறை அரசாங்கம்

February 10, 2022

அல்லாஹு அக்பர்!

February 10, 2022

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்

August 1, 2021
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.